tamilnadu

img

சாதி, மதம், இனத்தின் பெயரால் மக்களை பாகுபடுத்தக்கூடாது

விக்கிரவாண்டி,அக்.28  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்  ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய், மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். “பிறப்பொக்கும் எல்லா  உயிர்க்கும் என்பது முதல் கோட்பாடு. மதம், சாதி, இனம், மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக் கூடாது; மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்; மாநில மற்றும் மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்; விகிதாச்சார இட  ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி,  எல்லா வகையிலும் ஆண்களுக்கு பெண்கள் சமம்; இருமொழிக் கொள்கையே தவெக-வின் மொழிக் கொள்கை” என அவர் பேசும் போது அறிவித்தார். “எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள்  தவெக-வுக்கு செலுத்த உள்ள  வாக்குகள் ஒவ்வொன்றும் அணு குண்டாக மாறும். என்ன தான் எங்க ளுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றா லும், மோடி மஸ்தான் வித்தை காட்டி னாலும் எங்களிடம் அது எடுபடாது” என்றும்,  “பிளவுவாத அரசியல் நமது  சித்தாந்த எதிரி” என்றும் கூறினார்.

தீர்மானங்கள்  

நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், தேர்வு செய்யப்பட்ட அர சாங்கத்தை ஆளுநர் சீர்குலைக்கக் கூடாது, கல்வியை மாநிலப் பட்டி யலுக்கு மாற்றவேண்டும், தமிழை வழக்காடு மொழி ஆக்குவது, பகுத்த றிவு சிந்தனைகளை வளர்ப்போம், பிற்போக்கு சிந்தனைகளை புறக்கணிப்போம், அரசு மற்றும் தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும்  இயற்கை வளங்களை பாது காப்போம், போதையில்லா தமிழகம்  படைப்போம் உள்ளிட்ட பல தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன முன்னதாக  விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப் போர் தியாகிகளுக்கு மலர் தூவி  மரியாதை செய்தார்.  தொடர்ந்து தவெக கொடிப் பாடல் இசைக்கப் பட்டது. தொடர்ந்து பொதுச் செய லாளர் ஆனந்த் உரையாற்றினார். அதனையடுத்து கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக விழுப்புரம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக காலை யிலேய அக்கட்சியின் தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்ததால் கடும் வெயிலுக்கு பலர் மயக்க மடைந்தனர். அவர்களுக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது.