தனியார் துறையிலும் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்!
சிபிஎம் அகில இந்திய மாநாடு வலியுறுத்தல்
அரசுத்துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை யில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சனிக்கிழமையன்று (ஏப்.5) மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பி.வி. ராகவலு இதுகுறித்து மேலும் கூறியது வருமாறு: மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அரசியல் தீர்மானத்தின் மீது ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் விவாதம் நடைபெற்றது. 53 பிரதிநிதிகள் விவா தத்தில் பங்கேற்றனர். விவாதத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பதிலளித்தார். தீர்மானத்தின் மீது பிரதிநிதிகளிடமி ருந்து 174 திருத்தங்கள் வந்தன. அவற் றில் பொருத்தமான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பொருத்தமற்ற சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. கட்சி அமைப்பு குறித்த அறிக்கை வெள்ளியன்று (ஏப்.4) மாலை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, இதுவரை 18 பிரதிநிதிகள் உரையாற்றியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தொழிலாளர் களின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக் கைகளுக்காக ஐக்கிய விவசாயிகள் முன் னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) நடத் திய போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது. நிலம், வீடு போன்ற அடிப்படைத் தேவை களுக்காகவும், உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கும் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகா ராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான் மற்றும் இதர மாநிலங்களில் கடந்த 3 ஆண்டு களில் முக்கியமான போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளுக்கு எதிராக கேரளத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரங்கள் நடைபெற்றன. வேலையின்மைக்கு எதி ராக மேற்குவங்க மாநிலத்தில் இளை ஞர்கள் விரிவான பிரச்சாரம் மேற்கொண் டனர். திரிபுராவில் சிபிஎம் மீது பாஜகவினர் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக வும், மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் கிளர்ச்சிப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள், குழந்தை களுக்கு எதிராக கொடுமைகளை கண் டித்தும் கட்சி தீவிரமாக போராட்டங்களை நடத்தியது. உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த அகில இந்திய மாநாட்டிற்கு (2021) பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்துள்ளது.
2021-இல் 9 லட் சத்து 85 ஆயிரத்து 757 ஆக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 2024-இல் 10 லட்சத்து 19 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கட்சியில் மகளிர் விகிதாச்சா ரமும் அதிகரித்துள்ளது. மொத்த உறுப்பி னர்களில் மகளிர் விகிதம் 18.2 விழுக் காட்டில் இருந்து 20.2 விழுக்காடாக அதி கரித்துள்ளது. இளைஞர்களின் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளது. கட்சி உறுப்பினர்களில் 2021-இல் 19.5 விழுக்கா டாக இருந்த இளைஞர்களின் விகிதம் 2024ல் 22.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கட்சியில் வர்க்க விகிதம் ஆரோக்கிய மான முறையில் உள்ளது. மொத்த உறுப்பினர்களில் 48.5 விழுக்காட்டினர் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். 17.79 விழுக்காட்டினர் விவசாயத் தொழி லாளர்கள், 9.93 விழுக்காட்டினர் ஏழை விவசாயிகள். இவற்றில் மொத்தமாக 75.97 விழுக்காட்டினர் அடிப்படை வர்க்க மான தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்த வர்கள். கடந்த கட்சி மாநாட்டிற்கு பிறகு வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை 64 லட்சம் அதிகரித்துள்ளது.
13 தீர்மானங்கள் நிறைவேற்றம் ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் முழு அதி காரங்களை கொண்ட மாநில அரசை மீண்டும் ஏற்படுத்த வேண்டும், அங்கு ஜனநாயகம் முழுமையாக மீட்டெடுக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், கியூபா மீதான அமெரிக்காவின் மனிதநேயமற்ற பொருளாதார தடை களை கண்டித்தும் தனியார் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வேளாண் விளை பொருள் குறித்த ஒன்றிய அரசின் கொள் கையை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு பொதுமக்களின் அடிப்படைத் தேவையை, அடிப்படை உரிமை யாக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசுத்துறை களில் வேலை வாய்ப்பு குறைந்து வரும்
நிலையில் தனியார் துறையிலும் எஸ்.சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் பொதுத் துறை மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆழ்கடல் கனிம வளம் எடுக்க அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பெண்கள் குழந்தை களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன் முறைக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு சம உரிமை கிடைப்பதையும், அவர்கள் கண் ணியமான முறையில் வாழ்வதை உறு திப்படுத்த வேண்டும்; மாற்றுத் திறனாளி கள் கண்ணியத்துடனும் வாழ்வதற்கு, அவர்களுக்கு பாகுபாடற்ற முறையில் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என் பன உள்பட 13 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு பி.வி.ராகவலு கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பி.வி. ராக வலு பதில் அளித்தார். பேட்டியின் போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் அருண் குமார், முகமது யூசுப் தாரி காமி, தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப் பினர் க. கனகராஜ் ஆகியோர் உடனி ருந்தனர்.