மதுரை, டிச.29- இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பி யுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்திய மீனவர் களை ஜனவரி மாதத்திற்குள் மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைப்பிடிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பாக மீன்பிடிக்க சென்ற சுமார் 68 மீனவர்களை இலங்கை கடற் படையினர் அத்துமீறி பிடித்துசென்ற னர். அவர்கள் இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பிடித்து செல்லப்பட்ட 68 மீனவர்கள் மீதும் மனித உரிமை மீறல்கள் நடை பெற்றது என புகார் எழுந்தது.
கொரோனா தொற்று காலம் என்பதால் மீனவர்களை நிற்கவைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திரு முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை உடனடியாக மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன வர்கள் பிடிபட்ட தகவல் கேள்விப் பட்ட உடனேயே தமிழக முதல்வர், ஒன்றிய அரசை தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றார். ஆனால் தற்போது வரை ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண் டும் என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 29 புதனன்று நீதிபதிகள் சிவ கார்த்திகேயன் , ஸ்ரீமதி ஆகியோர் அட ங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர் களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது. அப்போது, ஒன்றிய அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு பேசி வருகிறது. அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என ஒன்றிய அரசு வழக்கறிஞர் தெரி வித்தார். இதைத்தொடர்ந்து, மீன வர்கள் 68 பேரை ஜனவரிக்குள் மீட்டு வாருங்கள் என்று நீதிபதிகள் வலி யுறுத்தினர். மேலும் இந்த வழக்கை டிசம்பர் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.