tamilnadu

நெல் கொள்முதல் செய்ய இணையவழி முன்பதிவு முறையை ரத்து செய்க!

புதுக்கோட்டை, ஜன.25 - தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் கடந்த 24, 25 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய துணைத்  தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி. பெருமாள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்  சாமி வரவேற்க, தலைவர் ஏ.ராமையன் நன்றி  கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியது:  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு இணையவழி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படு கிறது. இதனால் விவசாயிகள் தேவை யில்லாமல் அலைய வேண்டிய நிலை உள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள  நடைமுறைப்படி கேட்கும் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.  கொள்முதல் நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் துணையில்லாமல் முறைகேடு நடக்காது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு 3.50 ரூபாய் இருந்ததை தற்போது 10 ரூபாயாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.  இதைப்போல, கொள்முதல் ஊழியர், உதவியாளர், வாட்சுமேன் உள்ளிட்ட வர்களுக்கும் உரிய ஊதிய உயர்வை உயர்த்திட வேண்டும், இத்துறையில் மேலிருந்து கீழ்வரை உள்ள முறைகேடுகள், ஊழலை ஒழித்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலைமறியல் போராட்டம்

ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் ஜனவரி 29 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் விவசாயிகளைத் திரட்டி மாபெரும் சாலைமறியல் போராட்டத்தையும், 03.02.2022 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதென்று மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.

பிப்ரவரி 23,24 பொதுவேலைநிறுத்தம்

நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரி, பொதுத்துறை நிறுவனங்களை பெரும் கார்ப்பரேட்களுக்கு தாரைவார்ப்பதை நிறுத்திடக் கோரி, குறைந்தபட்ச ஆதார விலை யை சட்டரீதியாக உத்தரவாதமாக்கிட கோரி,  2022 பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடத்துவதென மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இப்பொது வேலை நிறுத்தம் வெற்றிபெற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து பணியாற்றும். 

கர்நாடக  அரசுக்கு கண்டனம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் குடிநீருக்காக பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் 4600 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பதோடு, திட்டத்தை விரைந்து செயல்படுத்திடவும் வலியுறுத்துகிறது. இத்திட்டத்திற்கு கர்நாடக மாநில பாஜக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. 

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 14.12.2021 முதல் 44 நாட்களாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போராடும் கரும்பு  விவசாயிகளுக்கு கிராம மக்கள், ஜனநாயக  இயக்கங்கள் தொடர்ந்து ஆதரித்து வரு கின்றன. ஆலையை திறந்து செயல்படுத்திடக் கோரி முதலமைச்சர் மற்றும் வேளாண்துறை, தொழில்துறை அமைச்சர்களிடம் மனு அளித்தும் அரசு கண்டு கொள்ளாதது மிகுந்த  கண்டனத்திற்குரியது. ஆலையை திறக்கக் கோரி வருகின்ற 28.01.2022 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துமானால் ஜனவரி-31 அன்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும்.

கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள்

கோயில் இடங்களில் அடிமனையில் வீடுகட்டி குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்திருப் போருக்கு வாடகை, குத்தகை தொகையை பல  மடங்கு உயர்த்தி, உயர்த்தப்பட்ட வாடகை யை முன்தேதியிட்டு கட்ட வேண்டும் என  அறநிலையத்துறை பயனாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீஸில் குறிப் பிட்டுள்ள தொகையை ஒரே தவணையில் உடன் கட்டவில்லையென்றால் சட்டப்பிரிவு 78,79-ஐ பயன்படுத்தி காலம் காலமாக குடி யிருந்து வருபவர்களையும், சாகுபடி செய்யும் விவசாயிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறிவித்து வெளியேற்றுவோம் என மிரட்டுகின்றனர்.  இதுகுறித்து துறையின் அமைச்சர், உயரதிகாரிகளிடம் பலமுறை தமிழ்நாடு  அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகளை வலி யுறுத்தியுள்ளோம். வாடகையை குறைத்திட வேண்டும், பயனாளிகளை வரன்முறைப் படுத்த வேண்டும், புதிய வாடகை நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டுமென்று கோரினோம். அந்த அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே குழு புதிய வாடகை நிர்ணயிக்கும் வரை அறநிலையத்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.  கோயில் இடங்களில் இருப்பவர்கள் அனை வரும் ஆக்கிரமிப்பாளர்கள், சட்டவிரோதிகள் என்று பொதுமக்கள் மத்தியில் சித்தரிக்க முயற்சிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இவ்வாறு பெ.சண்முகம் பேட்டியின் போது குறிப்பிட்டார்.