சென்னை,ஏப்.22- தமிழ்நாட்டிற்கு வழங்கும் மின்தொகுப்பு மற்றும் நிலக்கரியை கடந்த 18 ஆம் தேதியிலிருந்து ஒன்றிய பாஜக அரசு குறைத்துவிட்டதே தற்போ தைய மின்தடைக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை(ஏப்.22) கேள்விநேரம் முடிந்ததும், மின் தடை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி,“தமிழ்நாட்டில் அனல்மின் மற்றும் புனல்மின் நிலைங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத் திருக்கிறது” என்று கேட்டார்.. காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை,“ தமிழ்நாடு மின் மிகை மாநிலம் இல்லை என்றாலும் தர்சார்பு மாநிலமாக உள்ளதால் மின்வெட்டு இல்லா மல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,“தமிழ்நாட்டின் ஒருநாளைய சராசரி மின் நுகர்வு என்பது 317 மில்லியன் யூனிட்டாக இருந்தது. அது தற்போது 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந் துள்ளது. இதனால், இந்த கோடைக்காலத்தை எதிர்கொள் ளும் வகையில் தேவையான மின்சாரத்தை பெறுவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள் ளோம். அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான தேவையை கணக்கிட்டு குறுகிய ஒப்பந்தமாக பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகளிடம் மிக குறைந்த விலையில் 3000 யூனிட் கொள் முதல் செய்திருக்கிறோம்” என்றார். மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்கவேண்டிய மின்சாரம் இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிலும் ஒரே நாளில் அதிக அளவில் குறைத்து விட்டது.
அதனால்தான் 16 பகுதிக ளில் மின்தடை ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டிற் குள் மின் உற்பத்தியை 31 விழுக்காடு அதிகரித்துள்ளதாலும் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து உடனடியாக கொள் முதல் செய்ததாலும் சில மணி நேரங்களில் நிலைமை சரி செய்து சமாளித்தோம் என்றும் அமைச்சர் கூறினார். தற்போது நிலக்கரி பற்றாக் குறை இருந்தபோதும்கூட இறக்குமதி நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும் கடந்த ஓராண்டில் ஒரு டன் கூட இறக்குமதி செய்யவில்லை. நமது உள்நாட்டு நிலக்கரியை கொண்டே மின் உற்பத்தியை அதி கரித்திருக்கிறோம். அதுமட் மின்றி, புனல் மின்நிலையங்களில் ஒன்றிய அரசின் நிர்ணயத்தை விட கூடுதலாக மின் உற்பத்தி செய்து நிலைமை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் எடுத்திருக்கிறோம்.
மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப் படுகிறது. ஆனால், ஒன்றிய அரசு 48 முதல் 50 ஆயிரம் டன் மட்டுமே வழங்கி வந்தது. அதுவும் கடந்த மூன்று நாட்களாக கணிசமாக குறைத்துவிட்டது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக் கையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த கோடையை சமாளிக்க தேவைப்படும் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. விரைவில் நிலக்கரி பெறப்படும் என்றும் முந்தைய அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் 68 முறை மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் மக்களுக்கு தடை யில்லாமல் சீரான மின்சாரம் வழ ங்குவதற்கு அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நமது மின் தேவையை கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை அதிகப்படுத்தி மின் மிகை மாநிலமாக மாற்றுவ தற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.