tamilnadu

img

சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக சிவந்த மண் - ச.வீரமணி

‘மண் சிவந்தது’ என்னும் நாவலை ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற மா. சாமுவேல் எழுதி யிருக்கிறார்.  இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் எஸ். இராமநாதன் மிகச்சரியாகக் கூறியிருப்பதுபோல, தான் பணியாற்றிய துறைக்கு எவ்வி தத்திலும் சம்பந்தமே இல்லாத ஒரு பணியினை ஒரு சிறந்த புலன் விசாரணை அதிகாரி யின் அனுபவத்துடனும், அர சுக் குற்றத்துறை வழக்கறி ஞரின் அனுபவத்துடனும் மிகச் சிறப்பாக அளித்திருக் கிறார். நாவலில் உள்ள சம்பவங்கள் தஞ்சை மாவட்ட த்தில் மண்டலக்கோட்டை என்னும் கிராமத்தில் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதி முன்பு வானம் பார்த்த பூமியாக இருந்ததா கும். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் காவேரியில், இரண் டாம் நூற்றாண்டிலேயே கரி கால் சோழன் கட்டிய கல்ல ணையின் அடித்தளத்தை ஆராய்ந்து மிகவும் வியந்து போன, பொறியாளர் சர் ஆர் தன் காட்டன் என்பவருடைய முன்முயற்சியின் காரண மாகக்  கட்டப்பட்டதுதான் புதாறு என்று அழைக்கப்படுகிற கல்லணைக் கால்வாய் (Grand Anicut) ஆறாகும். அது வரை வானம் பார்த்த பூமி யாக இருந்த தஞ்சை மாவட்டத் தின் ஒரு பகுதி, 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பொன் விளையும் பூமியாக மாறியது.

இவ்வாறு தொடங்கும் இந்த நாவலில் ஆற்றில் மணல் கொள்ளை மேற் கொள்பவர்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியர் பகத் என்பவர் கொலை செய்யப்படுகிறார். நாவலில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாள் 2008 ஆகஸ்ட் 1 ஆகும். அந்தக் கொலையைக் கண் ணுற்ற சாட்சிகள் எவரும் இல்லாததால் அப்போது விசா ரணை செய்த காவல்துறை யினர் அந்த வழக்கை ‘கண்டு பிடிக்க முடியாதது’ என முடித்து வைத்துள்ளனர். ஆயினும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் பகத்தின் நண்பரின் மகன்  கணேஷ் இந்தக் கொலை சம்பவத்தையும், அதன்  பின்னணியில் இருந்த கொலைபாதகப் பேர்வழி களையும் எப்படி நீதிமன்றத் தின் முன் கொண்டு வந்து நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்தார் என்பதுதான் இந்த நாவல். நாவலைப் படிக்கும்போது தஞ்சை மண்ணின் பின்னணி யையும், சமூகச் சீர்கேடுகளை யும் அதற்கு எதிராகப் போராட வேண்டியதன் அவ சியத்தையும் கதா மாந்தர்களின் குரல் வழியாக மிகவும் சிறப்பாகவே படைத்த ளித்திருக்கிறார் ஆசிரியர் சமூக அக்கறை  கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவலாகும் இது.

மண் சிவந்தது (நாவல்)
ஆசிரியர்: மா. சாமுவேல்
வெளியீடு:மெக்சாண்ட்ரா பப்ளிகேஷன்
2, ஜெ.வி.நகர், வங்கி ஊழியர் குடியிருப்பு, மாதா கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 005.
விலை: ரூ.300/-