ஐசிஐடியின் உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதைப்பெற்ற (2021 ஆம் ஆண்டு) இந்தியாவின் நான்கு அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தமிழகத்தில் உள்ளவை என்பது பெருமைக்குரிய விஷயமாகும். தமிழகத்தில் திமு அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் நீர்ப்பாசன வசதிகள், அணைகள் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. 2021-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான (WHIS) சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் விருதுக்கு தமிழகத்தில உள்ள மூன்று அணைகள் தேர்வாகி உள்ளது.
கல்லணை
கல்லணை கரிகால சோழ மன்னனால் இரண்டாம் ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணை யைக் கட்டிய பழந்தமிழ் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். கல் மற்றும் களிமண்ணால் கட்டப்பட்ட இந்த அணை 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரியில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயம் தான். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டுள்ளனர். அந்தப் பாறை கள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்ச மாக மண்ணுக்குள் சென்றுள்ளது. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீ ரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய இரண்டு பாறைகளையும் ஒட்டியுள்ள னர். இதுவே இந்த அணையின் நவீன தொழில் நுட்பமாகும்.
சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கி லேயப் பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத் தாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் 1829-ஆம் ஆண்டு காவிரி பாசனப் பகுதி தனி பொறுப்பாளராக சர் ஆர்தர் காட்டன் நிய மிக்கப்பட்டார். இவர்தான் கல்ல ணையை சிறு சிறு பகுதி களாகப் பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணையின் கட்டுமானத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனை யும் பாசன மேலாண்மை யையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்ல ணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரை யும் அவர் சூட்டினார். சாதாரண காலங்களில் காவிரி நீரை கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பது தான் கல்லணையின் முக்கியப் பங்களிப்பு. வெள்ளம் வந்தால் காவிரியில் பெருகி வரும் தண்ணீரை கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வது தான் கல்லணை. இந்த அணை மூலம் டெல்டாவில் ஒரு மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களி லும், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக் கோட்டை, கடலூர் மாவட்டங்களின் சில பகுதி களிலும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதார மாக இது விளங்குகிறது. உலக அளவில் நீர்ப்பாசன கட்டமைப்பிற் கான விருதை கல்லணை பெறுகிறது. இது காலதாமதமாக கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாலும் இந்த விருது சமூக ஆர்வலர் களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணை குறித்து மயிலாடுதுறையை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில, “ கல்லணை கால்வாய் கள், வடிகால் வசதியுடன் திட்டமிட்டு வடி வமைக்கப்பட்டுள்ளது. இதைப் பாதுகாக்கும் பொறுப்பு அதிகாரிகளும், விவசாயிகளுக்கும் உள்ளது என்றார்.
வீர நாரயாயண ஏரி
வீர நாரயாயண ஏரி தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் முதல் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு 2 கி.மீ. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது கி. பி. 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இந்த ஏரி இராஜேந்திர சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இவரது தந்தை முதலாம் பராந்தக சோழன். இவரது இயற்பெயர் வீரநாரயணன் ஆகும். இப்பெயரே வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட்டது, கால போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.
காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாகஇந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியில் 1.465 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி அடி) வரை தண்ணீரைச் சேமிக்க முடியும்.முன்பு காட்டுமன்னார் கோயில் மற்றும் சிதம்பரம் தாலுகாவில் உள்ள 100 கிராமங்களில் சுமார் 44,860 ஏக்கர் நிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஏரியாக மட்டுமே இருந்தது. பின்னாளில் இங்கிருந்து 235 கி.மீ,. தொலைவில் உள்ள சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேற வில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2005-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவல் இந்த ஏரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. இந்த நாவலில் இந்த ஏரி ‘வீரநாராயண ஏரி’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 47.5 அடி ஆகும். காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் கூறுகை யில், சென்னையின் நீர் ஆதாரமாக மாறிய பிறகு, வீராணத்தில் எப்போதுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. வீராணத்தின் மேற்குப் பகுதியை பலப்படுத்த வேண்டும். வீராணத்தை அழகுபடுத்தி படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
காளிங்கராயன் அணை
காளிங்கராயன் என்ற கொங்கு நாட்டுத் தலைவரால் 13-ஆம் நூற்றாண்டில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் காளிங்கராயன் வாய்க்காலுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. பவானி ஆறும் காவிரி ஆறும் சந்திக்கும் பவானியின் கூடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. காளிங்கராயன் கால்வாய் இங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டத்தை செழிக்கச் செய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுகாகளில் 15,745 ஏக்கர் பரப்பிலான விவசாயத் திற்கு காளிங்கராயன் அணைக்கட்டு பயன்பட்டுள்ளது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி அதிகபட்சமாக நொடிக்கு 1.26 லட்சம் கன அடி (கனஅடி) வெள்ளநீர் இங்கிருந்து வெளியேற்றப் பட்டுள்ளது. நெல், மஞ்சள், வாழை மற்றும் கரும்பு விவசாயத்திற்கு பயனளிக்கும் வகையில் காளிங்க ராயன் அணை வாய்க்கால் சுமார் 90 கி.மீ வரை வரை செல்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வரலாற்றாசிரியரும் பயணியுமான பிரான்சிஸ் புக்கனனின் கூற்றுப்படி, இது சுமார் 3,500 ஏக்கர் மட்டுமே பாசனம் வசதியளித்ததாக கூறப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, இந்த அணையின் கரைகளை வலுப்படுத்தி மேம்படுத்தி யுள்ளது. உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருது (ஐசிஐடி)வழங்கும் விழா நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத்துறை) சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டில், மாநில அரசு பத்துக்கும் மேற்பட்ட அணைகளை உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகு பரிந்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
- ச.நல்லேந்திரன்