இராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு
சென்னை, மே 13 - பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஏப்.6 ஆம் தேதி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ஏப். 7 ஆம் தேதி முதல் இராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தினசரி 3 பயணிகள் ரயில்கள், சென்னைக்கு தினசரி 3 விரைவு ரயில்கள், திருச்சிக்கு ஒரு விரைவு ரயில் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன. மேலும் இராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு வாரத்திற்கு மூன்று முறை அதிவிரைவு ரயில், இரா மேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில், இராமேஸ்வரம்-கோவை வாராந்திர விரைவு ரயில், இராமேஸ்வரம்-பெரோஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், இராமேஸ்வரம்-திருப்பதி வாரம் இருமுறை விரைவு ரயில், இராமேஸ்வரம்-ஓகா வாராந்திர விரைவு ரயில், இராமேஸ்வரம்-புவனேஸ்வர் வாராந்திர விரைவு ரயில் ஆகிய சேவைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில், மே 14 அன்று முதல், இராமேஸ்வரம் - மதுரை பயணி கள் ரயில் காலை மாலை 6 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கு, இரண்டாவது சேவை காலை 10.45 மணிக்கு பதில் 10.30 மணிக் கும், மூன்றாவது சேவை பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும் புறப்படும். இராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.50 மணிக்கு பதில், 3 மணிக்கு புறப்படும். இராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும். இராமேஸ்வரம் - கோவை எக்ஸ்பி ரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.55 மணிக்கு புறப்படும். இராமேஸ்வரம் - சென்னை சேது எக்ஸ்பிரஸ் இரவு 8.35 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும். மே 15 ஆம் தேதியிலிருந்து, இராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் மாலை 4.20 மணிக்கு பதில் 4.30 மணிக்கு புறப்ப டும். ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து இராமேஸ்வரம் - கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் இரவு 9.10 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு புறப் படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.