மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியை திறந்து விடாததை கண்டித்து சனிக்கிழமையன்று (ஏப்.16) எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சுரேந்திரன், செயலாளர் எஸ்.மனோன்மணி, பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.
சென்னை, ஏப்.16 - ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய சென்னை ரயில்வே கோட்டம் உரிய ஏற்பாடு செய் திருப்பதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திரு வனந்தபுரத்துக்கு கடந்த 13 ஆம் தேதி புறப்பட்ட அனந்த புரி விரைவு ரயிலில் மாற்றுத் திறனாளி ஒருவர் அவர்க ளுக்கான பெட்டியில் ஏற முயன்றார். அப்போது பணி யில் இருந்த கார்டு அவரை ஏற்றுவதற்கு மறுத்தார். ரயில்வே நிர்வாகம் இன்னும் அனுமதி அளிக்காததால் பயணம் செய்ய முடியாது என்று கூறினார். ரயில்வே பொது மேலா ளர் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டதாக அந்த மாற்றுத்திறனாளி கூறியும் கார்டு ஏற்க மறுத்துவிட்டார். இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் வெளியானது. இந்த நிலையில் அந்த மாற்றுத் திறனாளி அளித்த புகாரின் பேரில் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கள் விசாரணை நடத்தினர். கொரோனா தொற்று பாதி ப்புக்கு பிறகு ரயில்களில் முன்பதிவு அல்லாத பயணி களுக்கு அனுமதி அளிக்கப் பட்டதை தொடர்ந்து மாற்று த்திறனாளிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஒவ்வொரு விரைவு ரயிலி லும் என்ஜின் பகுதியில் பின்புறமும், கார்டு இருக்கும் கடைசி பெட்டியிலும் மாற்று த்திறனாளிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படு வர்கள். ஆனால் அனந்தபுரி விரைவு ரயிலில் பணியில் இருந்த கார்டு எதற்காக அனு மதி மறுத்தார் என்று துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதில் கார்டு மீது தவறு இருந்தது தெரிய வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. மாற்றுத்திறனாளிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய சென்னை ரயில்வே கோட்டம் உரிய ஏற்பாடு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை கோட்ட ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் ரயில்களில் படிப்படியாக மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இணைக்கப்பட்ட பெட்டி களில் மாறறுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்க ளது அடையாள அட்டையை காண்பித்து ரயில் சலுகை டிக்கெட் வாங்கிக்கொள்ள லாம் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.