ராய்ப்பூர்,ஜன.30- சத்தீஸ்கர் அரசு அமைக்க உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு பிப்ரவரி 3 அன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., அடிக்கல் நாட்டுகிறார். தில்லியில் இந்தியா கேட் பகுதியில் வங்கதேச போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக எரிந்து வந்த இந்த ஜோதி தற்போது அணைக்கப்பட்டுப் போர் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது டிவிட்டரில், “பல தலை முறைகளுக்கு இந்திய வீரர்கள் போரில் மரணம் அடைந்த தியாக வரலாறுகள் உத்வேகம் அளித்து வருகிறது. ஆனால் நாட்டுக்காகப் போரிடாதோருக்கு இது பற்றி எதுவும் தெரியாது. சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அமர் ஜவான் ஜோதி அமைக்கப்பட உள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் அமையவுள்ள இந்த அமர் ஜவான் ஜோதி க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடி க்கல் நாட்டுவார்” என அறிவித்துள்ளார்.