tamilnadu

img

முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீடு

சென்னை, பிப்.28  தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய தன்வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வெளி யிட்டார். சென்னை நந்தம்பாக்கம்  வர்த்தக மையத்தில் திங்களன்று (பிப்.28) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு  விழாவிற்கு  தி.மு.க  பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன் தலைமைதாங்கினார். தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி அனைவரையும் வரவேற்றார்.  காங்கிரஸ் துணைத் தலை வர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளி யிட்டு பின்னர் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரு மான தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல் வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா,  கவிஞர் வைரமுத்து, திரைக் கலைஞர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.  விழாவில் முடி வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கினார். தி.முக. தலைவரும், முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின், 1953ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை யிலான தனது 23 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றி ‘உங்களில் ஒருவன் -1’ என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவு கள், திமுகவில் சேர்ந்து செயல் பட்டது தொடர்பாக தனது அனு பவங்களை பகிர்ந்துள்ளார்.

வரவேற்பு 

முன்னதாக  நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விழா அரங்கிற்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முத லமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயிலில் நின்று வரவேற்றார். இந்த விழாவில் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டிகே.ரங்கராஜன், திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. ஜவா ஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.