வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்குக! அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை, மே 20- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை, ஊதிய நிலுவைப் பாக்கியை வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (மே 20) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு நடப்பு நிதி ஆண்டிற்கு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதால், குறைந்த நாட்களே வேலை வழங்கப் பட்டு வருகிறது. தற்பொழுது 10 பேர், 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்கிட உத்தரவிடப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் ரூ.4000 கோடி தமிழ்நாட்டின் ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி இருந்த நிலையில், விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் நடத்திய தொடர் போராட்டங்களால் ஊதிய நிலுவை ரூ.2999 கோடியை ஒன்றிய பாஜக அரசு விடுவித்தது. இருப்பினும் இன்னும் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பளத்தை பாக்கி வைத்து காலம் கடத்தி வருகிறது. இந்நிலையில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். குறைந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க போடப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி பகுதிகளிலும், ஊராட்சி ஒன்றியங்களி லும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னத்துரை எம்எல்ஏ புதுக்கோட்டை யிலும், பொதுச் செயலாளர் வீ.அ மிர்தலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும், மாநிலப் பொரு ளாளர் அ.பழனிச்சாமி திருச்சி மாவட்டத் திலும் பங்கேற்றனர்.