tamilnadu

ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கை கண்டித்து ஜூன் 26 தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கை கண்டித்து ஜூன் 26 தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் முடிவு

மதுரை, ஜூன் 8- தமிழ்நாடு நெடுஞ்சா லைத் துறை ஊழியர் சங்க  மாநில செயற்குழு கூட்டம்  சனியன்று மதுரையில், மாநிலத் தலைவர் க.முத்துக் குமார் தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட தலை வர் இரா.தமிழ் துவக்க உரை யாற்றினார். முன்னதாக கடந்த 7.3.2025 அன்று கால மான மாநில பொருளாளர் தோழர் பச்சமுத்து அவர் களுக்கு புகழஞ்சலி செலுத் தும் வகையில், அவரது புகைப்படத்திற்கு மாநிலச் செயலாளர் சி.வல்லத்தரசு மாலை அணிவித்து மரி யாதை செய்தார். மாநில பொதுச் செயலா ளர் ஆ.ரெங்கசாமி அறிக்கை  வாசித்தார். மாநில செயற் குழு உறுப்பினர்களின் விவா தங்களுக்கு பிறகு அறிக்கை கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் முதுநிலை பட்டியலுடன் வெளியிட வேண்டும். தாமதமின்றி அனைத்து நிலை பணியா ளர்களுக்கும் பதவி உயர்வு  உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். கலந்தாய்வு முறையில் பணியிட மாறு தல் வழங்கிட வேண்டும் உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்ப்பந்தம் செய்வதும் மற்றும் காணொளி கூட்டம் வாயிலாக ஊழியர்களை அச்சுறுத்தும் வகையிலும், மன உளைச்சல் ஏற்படுத்தக் கூடிய வகையில் மிரட்டி வரும் சென்னை கட்டுமான மற்றும் பராமரிப்பு தலை மை பொறியாளரின் (நெ)  ஊழியர் விரோத போக்கை  கண்டித்தும், அதேபோல் இதர நிலுவை கோரிக்கை களை முதன்மை இயக்குனர் (நெ) நிறைவேற்ற வலியுறு த்தியும் ஜூன் 26 அன்று தமி ழகம் முழுவதும் அனைத்து (நெ) கட்டுமானம் மற்றும்  பராமரிப்பு கோட்ட அலுவல கங்கள் முன்பாக கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டமும், 22.7.2025 அன்று அனைத்து (நெ) கட்டுமான மற்றும் பரா மரிப்பு வட்ட அலுவலகங் கள் முன்பு மாலை நேர தர்ணா போராட்டமும் நடத்து வது என முடிவு செய்யப் பட்டது. மேலும், சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாட்டினை செப்டம்பர் முதல் வாரத்தில் கோயம் புத்தூர் மாவட்டத்தில் நடத்துவது எனவும் முடிவு  செய்யப்பட்டது. இறுதியாக  புதிதாக தேர்வு செய்யப்பட்ட  மாநில பொருளாளர் தோழர்  மா.தங்கமுத்து நன்றி கூறி னார்.