சென்னை,பிப்.28- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- உக்ரைனிலுள்ள தமிழக மாணவர்களை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, “உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து, அவர்களுக்குத் தேவை யான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்ற வற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும், இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தி யாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதெனவும், விரைவில் அவர்கள் மீட்டுக்கொண்டு வரப்படுவார்கள் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் உறுதியளித்துள்ளார்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.