சென்னை,ஜூன் 16- தொய்வாக உள்ள திட்டங்களை ஐந்து மாதங்களில் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத் தனார். தமிழ்நாட்டில் முத்திரைத் திட்டங்கள் குறித்த முதல் கட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளியன்று(ஜூன் 16) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “ கடந்த ஆய்வுக் கூட்டத்துடன் இந்த ஆய்வுக் கூட்டத்தினை ஒப்பிடும்போது பெரும்பாலான திட்டங்களில் சிறப் பான முன்னேற்றம் காணப்பட்டாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப் படுகிறது என்பதனை இந்த நீண்ட ஆய்வுக்குப் பிறகு நீங்களே தெளிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள்” என்றார். தொடர்ச்சியாக கண்காணிக்கப் படும் திட்டங்கள், எதிர்பார்த்த காலக்கட்டத்துக்கு முன்பே செயலாக் கத்துக்கு வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மாநகரிலே விரைவில் திறப்பு விழா வினை எதிர்நோக்கி இருக்கக்கூடிய கலைஞர் நினைவு நூலகம் போன்ற திட்டங்கள் அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். நம்முடைய இலக்கு என்பது தேசிய அளவில் முதலிடத்தை பெறு வது மட்டுமல்லாது, சர்வதேச அளவி லும் தலைசிறந்து விளங்கவும் இத்தகைய ஆய்வுக் கூட்டங்களை சிறப்பான வாய்ப்பாகவே நான் கருது கிறேன். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அத்தகைய ஒருங்கி ணைப்பினை உறுதி செய்ய இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் உங்க ளைப் போன்ற அரசின் உயர் அலுவலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பது விரைந்து முடிக் கப்பட்ட திட்டங்களின் மூலம் அறிய முடிகிறது. அதே சமயத்தில், இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் இன்னும் சில திட்டங்களின் முன்னேற்றம் தொய் வாக உள்ளது குறித்தும் விவாதிக்கப் பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமைச் செய லாளர் வெ. இறையன்பு, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.