பிரதமர் மோடி அவர்கள் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு வருகை தர இருக்கிறார். முதுமலைக்கு வருகை தரும் அவர் “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்பட நாயகர்களான பொம் மன் மற்றும் பெள்ளியை சந்திக்கவிருக்கிறார். அவரின் வருகையை ஒட்டி, நாட்டின் பிரதமரே நேரடியாக சென்று பழங்குடி மக்களை பாராட்டு கிறார் என உவப்போடு ஊடகங்கள் பக்கம் பக்க மாக கவர் ஸ்டோரிகளை எழுதக்கூடும். தொலைக்காட்சி மீடியாக்களின் ஓ.பி. (Outdoor Broadcast) வாகனங்கள் படையெடுத்துச் சென்று நேரலை காட்சிகளை ஒளிபரப்பு வார்கள். யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களி லும் நீண்ட உரையாடல்கள் வாயிலாக பிரத மரின் பிரதாபம் குறித்து பேசிக்கொண்டேயிருப் பார்கள். மூன்றே நாட்களில் பளபளப்பாக அமைக்கப்பட்ட சாலைகளின் வழியாக சென்று, அவசர அவசரமாக வண்ணம் பூசப்பட்ட ஒன்றி ரண்டு குடிசைகளை மட்டும் பார்த்து விட்டு திரும்பும் திட்டத்தோடு தான் பிரதமர் வரு கிறார் என்றாலும் கூட, திரும்புவதற்கு முன்பாக முதுமலையின் துயரக்கதைகளுக்கும் கொஞ் சம் காது கொடுக்குமாறு வேண்டுகிறோம். காட்டையே நம்பி வாழும் பழங்குடி மக் களை காட்டிலிருந்து அகற்றுவதற்கான நட வடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ளது ஒன் றிய அரசு. முதுமலை புலிகள் காப்பகத்திற் குள் உள்ள 30 கிராமங்களில் 701 பழங்குடி குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், அவர் களை வனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே “தங்க கை குலுக்கல் திட்டம்”. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து லட்சம் ரூபாய் தருகிறோம் எனவும், முதற் கட்டமாக ஏழு லட்சம் முன்பணம் எனவும் ஆசை காட்டி இதுவரையிலும் 569 ஆதிவாசி மக்கள் முதுமலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள னர். ஆனால் எந்தவொரு குடும்பத்திற்கும் பத்து லட்சம் முழுமையாக வழங்கப்படவில்லை. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.66.19 கோடி தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. வனத்துறையினரும், இடைத்தரகர்களும் சேர்ந்து கொண்டு பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொள் ளையடித்துள்ளனர். பல புகார்களை அளித்தும், போராட்டங்களை நடத்தியும் இன்று வரை எந்த வொரு நடவடிக்கையும் இல்லை.
செப்பேடு எனும் கிராமத்தில் வசிக்கும் அப்பு சொல்கிறார். “கொஞ்சமாக பணத்தை கொடுத்து அதன்மூலம் 25 செண்ட் நிலம் வாங்கி கொடுத்தார்கள். ஆனால் இன்று வரையிலும் அந்த நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை.” பெண்ணை எனும் கிராமத்தில் வசிக்கும் மாறன் என்பவரது கதையும் அதுவே. “ஆசை வார்த்தை காட்டி எங்களை மோசம் செய்து விட்டார்கள். பணத்தை மட்டுமல்ல, நாங்கள் வாழ்ந்த வனத்தையும் கூட இழந்து நிற்கி றோம்...” என்கிறார். ஆதிவாசி மக்களுக்காக அங்கு பணியாற்றும் மகேந்திரன் என்பவர் சொல் லும் கதையோ பெரும் அதிர்ச்சியாக உள்ளது. “ஒரு வயதான பெண்மணியிடம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று கேட்டேன். மூன்று லட்சம் கொடுத்ததாக சொன்னார். எங்கே அந்த பணத்தை காட்டுங்கள் என்று கேட்டபோது வெறும் மூன்றாயிரத்தை எடுத்து வந்து காட்டி னார். மூன்று லட்சத்திற்கும் மூன்றாயிரத்திற்கும் வித்தியாசம் தெரியாத பழங்குடி மக்களை தான், அரசு தங்க கைகுலுக்கல் திட்டம் என்ற பெயரால் வஞ்சித்துள்ளது.” என்கிறார். நாகம் பள்ளி, புளியம்பாறா எனும் இரண்டு கிராமத்தி லிருந்து மட்டும் 21 ஆதிவாசி மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக வழக்கு பதிவு செய் துள்ளனர்.
பாலப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் பிந்து எனும் பெண்மணி சொல்வது இது. “ மாற்று இடம் தருகிறேன் என இந்த இடத்தை காட்டி னார்கள். நானும் விவசாயம் செய்து வரு கிறேன். ஆனால் கடந்த ஆண்டு பெய்த பெரும் மழையில் விளை பொருட்கள் முற்றிலும் சேத மான போது இழப்பீடு கேட்கச் சென்ற போது தான் எனக்கு தெரிந்தது. எனது நிலத்திற்கு பட்டாவே இல்லை எனும் உண்மை..” இப்படி யாக எல்லா கிராமங்களிலும் தாங்கள் ஏமாற் றப்பட்ட துயரக் கதைகளை சொல்லிக் கொண்டே போகிறார்கள் காட்டு நாயக்கர் மற் றும் பளியர் சமூக பழங்குடி மக்கள். வனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கும், இதர பல கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கும் வீடு கட்டி தரு கிறோம் என ஆடம்பரமாக ஒரு திட்டத்தை அறி வித்தார்கள். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 1650 வீடுகள் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட் டில் கட்டித்தரப்படும் எனும் அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது. அதற்கு பிறகு விரிவு படுத்தப்பட்ட பழங்குடியினர் வீடு கட்டும் திட்டம் எனும் பெயரால் ரூ.4.95 லட்சம் செலவில் கட் டப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில் இதுவரைக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கை ஒலைக்குடிசைகளிலேயே தான் கழிகிறது. தங்க கைகுலுக்கல் திட்டம் எனும் பெயரால் ஏற்கனவே பலர் வெளியேற்றப்பட்ட அவல நிலைக்கு மத்தியில், தற்போது மீதமுள்ள 132 ஆதிவாசி குடும்பங்களையும் கூட வனத்தி லிருந்து வெளியேற்ற துடிக்கிறது ஒன்றிய அரசு. கேட்டால் புலிகள் காப்பகம், யானைகள் வழித் தடம் என காரணங்களை அடுக்குகிறார்கள்.
76 வயதாகும் மாதன் என்பவரின் கேள்வி இது.. “நாங்கள் பல தலைமுறைகளாக அடர்ந்த காட்டில் தான் வசித்து வருகிறோம். புலி, யானை, காட்டெருமை இன்னமும் பல விலங்குகளுக்கும் மத்தியில் தான் கழிகிறது எங்களின் அன்றாட வாழ்வு. வன விலங்குகளால் எங்களுக்கோ அல்லது ஆதிவாசிகளான எங்களால் வன விலங்குகளுக்கோ எந்த பாதிப்புமில்லை..” இப் போது ஏன் எங்களை வனத்திலிருந்து வெளி யேற்ற வேண்டும்..? அவரை விடவும் வயதில் மூத்த பெண்மணி ஒருவர் சொன்னார்.. “காடு எங்களுக்கு தாய் போன்றது. எங்களை காட்டி லிருந்து வெளியேற்றுவது தாய்ப்பால் பருகும் குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பதற்கு சமம்..” “எங்களையெல்லாம் காட்டிலிருந்து வெளி யேற்றி விட்டு காட்டை என்ன செய்யப் போகி றது இந்த அரசு..”? பழங்குடி மக்கள் எழுப்பும் இந்த கேள்வி முதுமலை காடு முழுவதும் எதி ரொலித்துக் கொண்டே இருக்கிறது.
தகவல் ஆதாரம்: இந்து ஆங்கில நாளிதழ், ரோஹன் பிரேம் குமார் கட்டுரை (மார்ச் 18) & பழங்குடி மக்களுடனான நேர்காணல்