சென்னை, அக். 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் நாளிதழுக்கு 593 சந்தாக்கள் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத் தின் (மெஸ்) மாநாடு கடந்த ஆகஸ்ட் 1 அன்று தென்சென் னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 10 முதல் 30 வரை, தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்றது. இந்நிலையில், மாநாட்டிற் காக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழாவும், தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு விழாவும் புத னன்று (அக்.4) சைதாப் பேட்டையில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழு வதும் சேகரிக்கப்பட்ட 593 சந்தாக்களுக்கான தொகை 8.20 லட்சம் ரூபாயை தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என். பாண்டியிடம், தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளர் ச. லெனின் வழங்கினார். நிகழ்வில் பேசிய தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராம லிங்கம், ‘நியூஸ் கிளிக்’ இணை யதளம் மீது ‘உபா’ சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழக்கு பதிந்து பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளதற்கு கண்ட னம் தெரிவித்தார்.
மேலும், “ஊடக ஜனநாயகம், சுதந்தி ரம் பறிக்கப்பட்டு வருகிறது” என்றும், “ஜனநாயகத்தை சீர்குலைக்கும் ஆர்எஸ்எஸ் என்கிற பிக்பாசிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்” என்றும் கூறிய மதுக்கூர் இராமலிங்கம், “வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நீதி கிடைக்க முழுக் காரணம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும்தான்; ஆனால், ஊடகங்கள் எது வும் இதுபற்றி எங்கும் குறிப்பிட வில்லை; உரிய முக்கியத் துவம் இல்லாமலேயே வாச்சாத்தி செய்தியை முத லாளித்துவ ஊடகங்கள் வெளி யிட்டன. இந்த தீர்ப்பையும் விவாதப் பொருளாக மாற்ற மறுத்து விட்டன” என்றார். தென்சென்னை மாவட்டக் குழு 2500 தீக்கதிர் சந்தா என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க. பீம் ராவ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், செ. முத்துக்கண்ணன், மாவட்டச செயற்குழு உறுப்பினர்கள் ஏ. பாக்கியம், கே. வனஜ குமாரி, எஸ். குமார், பா. பால கிருஷ்ணன், தீக்கதிர் சி. கல்யாணசுந்தரம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.