முன்யோசனை - -பெரணமல்லூர் சேகரன்
வறட்சியில் வற்றியது குளம்
தவளைகள் தாவின நிலம்
திரண்டு கண்டன கிணறு
மகிழ்ந்தன தண்ணீர் கண்டு
கிணற்றில் குதிக்க முயன்றன
தவளைகள் இரண்டு நிறுத்தின
கிணற்றில் தண்ணீர் வற்றியபின்
மேலே வருவது இயலாது
சட்டென தவளைகள் நின்றன
அனைத்தும் ஒன்றாய் யோசித்தன
நன்றென யோசனை கூறிய
தவளைக்கு நன்றி கூறின
வேண்டாம் கிணறு நமக்கு
வேண்டும் குளங்குட்டை ஓடை
தாண்டித் தவளைகள் குதித்தன
நீருற்று ஓடையைக் கண்டன
எதைச் செய்தாலும் முன்யோசனை
வேண்டும் என்பது படிப்பினை
இதையே உணர்ந்த தவளைகள்
ஓடையில் குதித்தது நல்வினை
-பெரணமல்லூர் சேகரன்
அலுமினியம் -புதுச்சேரி அன்பழகன்
மின்சாரம் பாய்ந்துவர
என்மேனி இடம்தரும்
மின் அதிர்ச்சி எனக்கில்லை
இன்பமாய் உணர்கிறேன்!
விண்ணேறி பறக்கின்ற
பறவையின் இன்பத்தை
நானும் அடைகின்றேன்
என்றால் நம்புங்கள்!
மண் உதைத்து மேலேறி
விண்பாயும் விமானம்
என்னை வைத்தே செய்வதால்
இவ்வாய்ப்பு கிட்டியது!
என்மீது துருஏற
என்னாலும் அனுமதியேன்!
என் வெண்மையின் நிறம்மாற
ஒரு போதும் விடமாட்டேன்!
தங்கம் வெள்ளிக்கே
மதிப்பு மிக தருகின்றீர்
எளிமையான் அலுமினியத்தை
ஏளனமாக எண்ணாதீர்.!
-புதுச்சேரி அன்பழகன்