tamilnadu

img

நான் பாஜக-வுக்கு எதிராக அரசியல் பேசுவதால் பலரும் என்னோடு நடிக்க பயப்படுகிறார்கள்

பெங்களூரு, நவ. 17 - பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு களை கூர்மையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவராவார். 2017-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் இந்துத்துவா கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல், அரசியல் வெளிக்கு வந்த பிரகாஷ் ராஜ், ஆர்எஸ்எஸ் - பாஜக-வின் பிளவுவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். மத்தியப் பிரதேசம், குஜராத், தில்லி போன்ற இடங்களில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் பெயரில் இஸ்லா மியர்களின் வீடுகள், கடைகள் இடிக்கப் பட்டன. அப்போது, “சிலைகள் அமைக்கப் படுகின்றன. வீடுகள் இடிக்கப்படுகின்றன.. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் (பாஜகவினர்) அழித்து விடுவார்கள்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ், தனது கருத்தை துணிச்ச லாக வெளிப்படுத்தினார். மற்றொருமுறை “பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்பு கிறார்கள், நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். பத்திரி கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை விஷயத்தில் ஒன்றுமே நடக்காதது போல பிரதமர் மோடி காட்டிய மவுனத்தை விமர்சிக்கும் வகையில், “பிரதமர் மோடி என்னை விட மிகச்சிறந்த நடிகர்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, சாலையில் கிடந்த காலி குடிநீர் பாட்டில்களை பொறுக்கித் தூய்மைப் பணியில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்களை பாஜகவினர் சமூக வலை தளங்களில் வெளியிட்டபோது, அந்த படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளி யிட்டு, “கேமிராவை கையாள்வதில் நமது உச்ச நடிகர் மற்றும் இயக்குநரை (பிரதமர் மோடியை) யாரும் மிஞ்ச முடியுமா?” என்று கிண்டலடித்தார். இந்நிலையில்தான், இவ்வாறு அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதால், சமீபகாலமாக யாரும் தன்னோடு சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை; அவர்கள் பயப்படுகிறார்கள் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஏட்டிற்கு இதுதொடர்பாக பேட்டி ஒன்றை பிரகாஷ் ராஜ் அளித்துள்ளார். அதில், ‘’சமீப  காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி  வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவ தில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னு டன் நடிக்க பயப்படுகிறார்கள். என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு  உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு  அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமா வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற் காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்ட வர்களை இழக்க நான் தயாராகவே இருக் கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களைக் குறைகூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும்” என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.