tamilnadu

மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் ஒத்திவைப்பு

சென்னை,ஜன.8- தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களை அரசு ஒத்தி வைத்தி ருக்கிறது. இதுகுறித்து, தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகை யில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி  வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது