tamilnadu

நெடுஞ்சாலை உணவகங்களில் தரமற்ற உணவு: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை,டிச.21- நெடுஞ்சாலை உணவகங்களில் வழங்கப்படும் உணவு தரமில்லை என்றால் நிச்சயம் நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். நெடுஞ்சாலை மோட்டல்களில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அங்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று எழும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “டெண்டர் விடப்பட்டுதான் நெடுஞ்சாலைகளில் மோட்டல்கள் நடத்தப்படுகின்றன. அங்குதான் வண்டி நிறுத்து வார்கள். பணம் கட்டும் ஓட்டலில்தான் முதலில் நிறுத்த வேண்டும். வேறு இடத்தில் நிறுத்த முடியாது. அவர்கள் அரசாங்கத்திற்கு பணம் கட்டுகிறார்கள். குறிப்பாக மோட்டல்களுக்கு என்ன வரையறை கொடுக்கப்பட்டுள்ளது என்றால் தரம், அளவு சரியாக இருக்க வேண்டும். சென்ற ஆட்சியில் இருந்ததை  விட விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். இதில் ஏதாவது புகார் இருந்தால், தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கி றோம். அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை” என்றார்.

நெடுஞ்சாலை உணவகங்களில் வழங்ப்படும் உணவின் தரம் குறித்து ஆராய உணவுப் பாதுகாப்புத்துறை என்று ஒன்று உள்ளது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த மோட்டலுக்குச் சென்று உணவுத் தரம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில்தான் என்றில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு சாலைகளில், பெங்களூரு, மதுரை, சென்னை, தஞ்சாவூர் என அனைத்துச் சாலைகளிலும் மோட்டல்கள் உள்ளன. ஆய்வு செய்பவர்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்கள். சரியாக இல்லையெனில் உடனே நோட்டீஸ் கொடுத்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார். பேருந்துகளை எந்தெந்த மோட்டல்களில் நிறுத்தவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் டெண்டர் எடுத்துள்ளதற்காக அவர்கள்  மோசமான உணவு அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தரம் குறைந்தால் உடனே அந்த டெண்டர் ரத்து செய்யப்படும். புதியவர்களுக்கு உத்தரவு அளிக்கப் படும். ஏதாவது புகார் இருந்தால் தெரிவியுங்கள். நிச்சயம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்கிறோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். விக்கிரவாண்டி உணவக சம்பவம் குறித்து புகார்கள் வந்தது பற்றிக் கேட்டதற்கு,  ‘’அந்த மோட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மோட்டல்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

;