சென்னை செல்ல இருந்த மாற்றுத்திறனாளிகளை திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்த காவல்துறை
திருச்சிராப்பள்ளி, ஏப்.22- ஆந்திராவைப் போல மாற்றுத்திறனாளிகளின் தீவிரத்தைப் பொறுத்து மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித் தொகைக்காக விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருப்பவர்களுக்கு காரணமே இன்றி ஒரு லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலிறுத்தி சென்னை யில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோட்டை நோக்கி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில் ஏப்.22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக் கான மாற்றுத்திறனாளிகள் திரண்டு போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்து சென்னைக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டனர். இந்நிலையில், திருச்சியில் இருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸில் திங்களன்று இரவு சிலர் ஏறிச் சென்றனர். இதுகுறித்து, தகவலறிந்த மாநகர காவல்துறையினர், மாற்றுத்திறனாளிகளை தடுக்க ரயில் நிலையம் வந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல இருந்த 40 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, சென்னைக்கு செல்லக்கூடாது என்றனர். இதை கண்டித்து மாற்றுத்திறனா ளிகள் திடீரென்று ரயில் நிலையத்துக் குள் கோஷங்களை எழுப்பினர். இதை யடுத்து, மாற்றுத்திறனாளிகள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.