tamilnadu

img

கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு

கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு 

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஸ் இறுதி மரியாதை

தேனி, மே 11 - பெரியகுளம் அருகே வடுகபட்டியில் காலமான கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம் மாள் (92) சனிக்கிழமை மாலை தேனி  மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி யில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  இதையடுத்து அவரது உடலுக்கு வைர முத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இறுதி  அஞ்சலி செலுத்தினர். ஊரக வளர்ச்சித் துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வைரமுத்துவின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆறு தல் கூறினர். தொடர்ந்து வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மயானத்தில் வைரமுத்துவின் தாயார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஊரக வளர்ச்சித் துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், பெரிய குளம் எம்எல்ஏ சரவணக்குமார், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.