tamilnadu

பிளஸ் 2’  தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

பிளஸ் 2’  தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

சென்னை, மே 6 - தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில், ஒரு நாள் முன்னதாக மே 8 அன்றே தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடு கிறார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் https://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதள முகவரிகளில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள மாணவர்களின் கைப்பேசி எண், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண் ஆகியவற்றுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை, 8 லட்சத்து 21 ஆயிரம்  பேர் எழுதியுள்ளனர்.