பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டன. இதில் 7,43,232 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் 5 ஆம் தேதி முதல் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதினர். இந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளையும் மதிப்பெண்களையும் தெரிந்து கொண்ட னர். இந்த தேர்வில், 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43 சதவீத மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 97.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 ஆம் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் 96.97 சதவீதமும், 3 ஆம் இடம் பிடித்த விருது நகர் மாவட்டம் 96.23 சதவீதமும், 4 ஆம் இடம் பிடித்த கோவை 95.77 சதவீதமும், 5 ஆம் இடம் பிடித்த தூத்துக்குடி 95.07 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
துணைத் தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை: 10, 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 10, 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளி யன்று வெளியாகின. இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாண வர்களுக்கு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்புக்கும், ஜூலை 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்புக்கும் துணைத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் சாகச நிகழ்ச்சி தொடக்கம்
கொடைக்கானல்: மூஞ்சிக்கல் விளையாட்டு மைதா னத்தில் வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. கொடைக்கான லில் முதன்முறையாக நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி யில் 15-60 வயது வரை பங்கேற்கலாம். 3 நாட்கள் நடை பெறும் வான் சாகச நிகழ்ச்சியில் நபர் ஒருவருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பதிவுத் துறை ஐஜி எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை அலுவ லகங்களில், சார் பதிவாளர்கள் பொதுமக்களை நாற்காலி யில் உட்கார வைத்துதான் பேச வேண்டும். எந்த சூழ்நிலை யிலும் அவர்களை நிற்க வைத்து பதிலளிக்கக் கூடாது. மீறும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று பதிவுத் துறை ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘இஓஎஸ்-09’ மே 18 இல் ஏவப்படுகிறது
சென்னை: நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் ‘இஓஎஸ்-09’ உள்ளிட்ட 6 செயற்கைக் கோள்கள் மே 18 ஆம் தேதி காலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்- 1பி) எனும் அதிநவீன செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தி லிருந்து ஏவப்பட உள்ளது.
குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி?
சென்னை: வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக் கோரி, அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தார். இந்த மனு, நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, ‘கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ‘கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப் பட்டுள்ளது’ என்றார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவ தில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே, ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும். மனுதாரரின் மகனுக்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறைத் துறைக்கு உத்தரவிட்டு” வழக்கை முடித்து வைத்தனர்.