tamilnadu

img

தொழிலாளர் உரிமையை பாதுகாப்போம்

கோவை, ஜன.27- அனைத்து மத்திய தொழிற்சங்கள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம் மற்றும் இந் திய வளங்களை பாதுகாப்போம், தொழிலாளர் களின் உரிமையை பாதுகாப்போம், மீட்டெடுப் போம் என்கிற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது.  தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்க ளைத் தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். வரு மான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல் லாத குடும்பங்களுக்கு மாதந்தோறும். ரூ.7 ஆயி ரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரமாக்கி சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிப்.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந் திய பொது வேலைநிறுத்தத்தை முழு வெற்றி  பெறச் செய்வோம் எனவும் அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நாடு முழுவதும் நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக கோவை திருவள்ளு வர் பேருந்து நிலையம் முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, சிவானந்த காலனி, பவர் ஹவுசில் துவங்கி காந்திபுரம் திரு வள்ளுவர் பேருந்து நிலையம் வரை இரு சக்கர வாகன பேரணி  நடைபெற்றது. ஆனால், காவல் துறையினர் இருசக்கர வாகன பேர ணிக்கு அனுமதி மறுத்தபோதும், அதனை மீறி தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாய் சென்றனர். இதில், எல்பிஎப் பெரியசாமி, ஐஎன்டியூசி பால சுந்தரம், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், தங்கவேல், சிஐடியு சி.பத்மநாபன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்எப் தியாகராஜன்,  ஏஐசிசிடியூ லூயிஸ், எஸ்டிடியூ ரகுபுரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

பெருந்துறை தினசரி மார்க்கெட் முன்பு நடை பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏஐடி யுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தார். இதில், ஏஐடியுசி கே.ஆர். தங்கவேல், சிஐடியு பி.ஜெகநாதன்,  டி.என்.சுந்தர வடிவேல், எல்பிஎப் சி.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு சிஐ டியு மாவட்டசெயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநில துணைத்  தலைவர் சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி மாவட்ட பொருளா ளர் ஏ.தெய்வானை, எல்பிஎப் மாவட்ட கவுன் சில் செயலாளர் சண்முகராஜா, மாவட்ட தலை வர் சின்னசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செய லாளர் கே.மணி, மாவட்ட தலைவர் மாதேஸ் வரன், பொருளாளர் முருகன், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சி.முருகன், எச்எம்எஸ் மாவட்ட செய லாளர் அர்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏஐ டியுசி மாவட்ட செயலாளர் என்.சேகர் தலைமை யில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், எல்பிஎப் மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, எல்பிஎப் மின் ஊழியர் சங்க செயலாளர் சர வணன், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் அ.சிவ சாமி, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் மாவட்ட செயலாளர் சம்பத், பனியன்  சங்கச் செயலாளர் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவிநாசி வஉசி திடலில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் முத்து சாமி, ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி, ராஜ், ரமேஷ், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி இசாக், ஐஎன்டியூசி நவநீத கண்ணன், லட்சுமணசாமி, எச்எம்எஸ் கலைச்செல்வன், எம்எல்எப் பெருமாள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றுது. இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி, ஏ. கோவிந்தன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், வி.ராமமூர்த்தி, விஜயலட்சுமி, சேகோசர்வ் சுமை  சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

உதகை

உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு  நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு எல்பிஎப் மண்டல செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். இதில், ஏஐடியுசி மண்டல பொறுப்பாளர் இப்ராஹிம், சிஐடியு மாவட்ட செய லாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் நவீன் சந்தி ரன், எல்பிஎப்  கவுன்சில் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.