சென்னை, பிப்.12- தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத் தும் நடவடிக்கையாக மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டாலும் மழலையர் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழ மையன்று (பிப்.12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அர சின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரி கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஜனவரி 22 அன்று 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை இந்த மாதம் 11 ஆம் தேதி 3,086 ஆக குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் வேலை வாய்ப்பு, பொருளாதாரம், மாணவர் களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்பு வதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு அர சால் பல்வேறு தளர்வுகள் அறிவிக் கப்பட்டு நடைமுறையில் உள்ளன. மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங் கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி யினை கடைப்பிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளவேண்டும். மேலும், அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையா ளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்க வேண்டும், உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்மந்தப் பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற் றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட வும், குறைக்கும் வகையில் பிப். 16 முதல் மார்ச். 2 வரைக்கும் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட் டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனு மதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகா மல் அனுமதிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக் காக விதிக்கப்பட்ட மற்ற கட்டுப் பாடுகள் விலக்கிக் கொள்ளப்படு கின்றன. மேலும், நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளி கள், திறக்க அனுமதியளிக்கப்படு கிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.