tamilnadu

img

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டோரை பாரபட்சமாக நடத்தக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜூன் 26 - உலக வெண்புள்ளிகள் தினம் ஜூன் 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய  வெண்புள்ளிகள் விழிப்பு ணர்வு இயக்கம் சார்பில் திங்களன்று (ஜூன் 26) சைதாப் பேட்டையில் ‘சேர்ந்து வரை வோம் மற்றும் விழிப்புணர்வு உறுதியேற்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் என்ற  அமைப்பு கடந்த 20 ஆண்டுக ளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு  வெண்குஷ்டம் என்று அழைக் கப்பட்டு வந்ததை, வெண் புள்ளிகள் என்று  அழைக்க முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார். மேலும், பள்ளிகளில் வெண்புள்ளி பாதிப்புள்ள மாணவர் சேர்கை யின் போதும், பாடம் புகட்டும்  போதும் எவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது என்ற அறிவு றுத்தலை அரசு அரசாணை வாயிலாக வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 37 லட்சம் பேர் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக குஷ்டம் என்றால்  தொழுநோய் என்று பொருள்.  தொழுநோய்க்கும், வெண் புள்ளிக்கும் சிறிதும் தொடர் பில்லை. எனவே, வெண்புள்ளி களால் பாதிக்கப்பட்டவர்களை அலட்சியப்படுத்துவது, பாரபட்சமாக நடத்துவது கூடாது என்றார்.

ஜூலை 4 கலந்தாய்வு

செய்தியாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவி யிலிருந்து இணைப் பேராசிரி யராக 423 பேருக்கு பதவி உயர்வு தரப்பட வேண்டும். இதற்கான கலந்தாய்வு ஜூலை 4ந் தேதி  தொடங்க உள்ளது என்றார். வெண்புள்ளிகள் விழிப்பு ணர்வு இயக்கத்தின் பொதுச் செயலாளர் கே.உமாபதி கூறுகையில், வெண்புள்ளி நோயல்ல, பிறருக்கு தொற்றாது. பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை கருத்தரங்குகள், மனித சங்கிலிகள், பேரணி கள், மாரத்தான்கள் என பல்வேறு வடிவங்கள் வாயிலாக விழிப்புணர்வு செய்து வருகிறோம். தமிழ் நாடு அறிவியல் இயக்கம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புகளோடு இணைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் விழிப்புணர்வு செய்ய உள்ளோம் என்றார். இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற  நீதிபதி ஆர்.பரஞ்சோதி, பெரு நகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முனைவர் டி.இ.திருவேங்கடம், அன்னை வேளாங்கண்ணி கல்வி  குழுமத்தின் நிறுவனத் தலை வர் முனைவர் எஸ்.தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.