சென்னை, மே 23- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வூதியர்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய பென்ச னர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே செவ்வாயன்று (மே 23) தர்ணா போராட்டம் நடை பெற்றது. தலைவர் பி.மோகன் தலைமை தாங்கினார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ் துவக்கி வைத்தார். தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், வருமான வரி பென்ஷனர்ஸ் அசோசி யேஷன் மாநிலச் செய லாளர் எம்.எல்.பெருமாள், அகில போஸ்டல் ஆர்எம்எஸ் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் பொரு ளாளர் சி.சேகர், சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் கே.கோவிந்த ராஜ், அகில இந்திய பிஎஸ் என்எல் டாட் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜ சேகர் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். தேசிய பென்சனர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு மாநில பொதுச்செயலாளர் கே.ராக வேந்திரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத் தில் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற்றால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் ஒன்றிய, மாநில அரசு ஊழி யர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இதனால், 6 மாநிலங்கள் பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்தி விட்டன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல் படுத்த மறுக்கிறது. கொரோனாவை கார ணம் காட்டி ஒன்றிய அரசு 18 மாத அகவிலைப்படியை முடக்கியது. ஒன்றிய அரசின் வருவாய் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வரி களின் மூலம் உயர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் குறைந்த பிறகும் பிடித்தம் செய்த அக விலைப்படியை மீண்டும் வழங்க மறுக்கிறார்கள் என்றும் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.