tamilnadu

ஊராட்சித் தலைவர், பணியாளர் கொடூரக் கொலை...

மதுரை:
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜன்  (54), ஊராட்சிமின் பணியாளரான  தலித் சமூகத்தைச் சேர்ந்த முனுசாமி (40)ஆகிய இருவரும் குன்னத்தூர்பாறை பகுதியில் (மலையடிவாரம்) ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தனர். உயிரிழந்த கிருஷ்ணராஜனுக்கு சித்ரா என்ற மனைவிஉள்ளார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த முனுசாமிக்கு இந்திரா என்ற மனைவியும், தேவி சிட்டு, அழகு சிட்டு என்றஇரு மகள்களும் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் முறையே ஆறு மற்றும் ஐந்தாம்வகுப்பு படித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் களால் கொல்லப்பட்ட முனுசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் கிளை உறுப்பினர் கார்த்திகைசாமியின் உடன் பிறந்த சகோதரி மகனாவார்.இவர்கள் இறந்து கிடப்பதை திங்களன்று அதிகாலை பார்த்தஅப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற் காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கருப்பாயூரணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கிருஷ்ணராஜனும், முனுசாமியும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஞாயிறன்று இரவு 11 மணி வரை வீடு திரும்பவில்லை. எனவே11 மணிக்குப் பின்னர் இந்தகொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்கின்றனர்.இதே ஊராட்சியில்  ஊராட்சித் தலைவராக இருந்த பழனியப்ப முதலியார் என்பவரும்அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.