tamilnadu

500-க்கும் மேற்பட்ட ரோபோடிக்  முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

500-க்கும் மேற்பட்ட ரோபோடிக்  முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, ஜூன் 27  சென்னை வேளச்சேரியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளுள் ஒன்றான  பிரசாந்த் மருத்துவமனை, அதிநவீன 4ஆம் தலைமுறை வெலிஸ் ரோபோடிக் உதவி சாதனத்தைப் பயன்படுத்தி 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக  செய்துள்ளது.  இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சென்னையின் முதல் மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. துல்லியமான எலும்பியல் சிகிச்சையில் இதுவொரு மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்தியாவில் 10  கோடிக்கும் மேற்பட்டோர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு முக்கியமான நேரத்தில் எட்டப்பட்ட சாதனையாகும் என்று  மருத்துவமனையின் முதுநிலை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆறுமுகம் கூறினார். இவர் தலைமையிலான குழுவினர் இந்த  அறுவை சிகிச்சையை செய்துமுடித்துள்ளனர்.  இதன் மூலம் இவர் இந்தியாவின் முதன்மையான ஐந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ரோபோட்டிக் உதவியுடன் அறுவை சிகிச்சை துல்லியமானது, விரைவில் குனமடையக்கூடியது என்று  பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறினார்.