இலங்கை ராணுவம் இந்திய மீனவர் களை குறிப்பாக, தமிழக மீனவர் களை கைது செய்கிறது. அப்படி கைது செய்வ தோடு மட்டுமல்லாமல், மிகக் கொடூரமான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறது. கைது செய்த மீனவர்களை மொட்டை அடித்து அனுப்புகிறார்கள். மேலும், மீனவர்களை அங்கு சிறைகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வைக்கிறார்கள். இந்திய பிரதமர் இது குறித்து எல்லாம் பேச மாட்டார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப் பட்டால் அல்லது பாஜக ஆளுகிற மாநிலங் பளில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பார். ஆனால் பாஜக அரசு அல்லாத மற்ற மாநிலங்களில் பாராமுகமாக இருந்து விடுவார்.
தமிழக மக்களுக்கு ஏற்படுகிற பிரச்சனை களுக்கு தீர்வு காணாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் பாரபட்சம் காட்டுகிறார் பிரத மர் மோடி. தமிழக முதல்வர், மீனவர் பிரச்ச னைகள் குறித்து ஒன்றிய அரசாங்கத்திற்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். இந்தியா வின் அண்டை நாடான இலங்கையோடு பேசி மீனவர் பிரச்சனைகள் குறித்து முதல்வ ரால் நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால் முடியாது. அண்டை நாடு சம்பந்தப்பட்ட பிரச்ச னையில் ஒன்றிய அரசாங்கம்தான் நட வடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஏன் தொடர்ந்து மோடி மௌனம் காக்கிறார் என்பதுதான் கேள்வி. மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்கு தல்களைக் கண்டித்து கடந்த 15 தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் இராமநாதபுரத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மீனவர்கள் பிரச்சனை குறித்து தீர்வு காண்பதற்கான வழிமுறை களை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.
நொறுங்கிக் கிடக்கும் எளிய மக்களின் வாழ்வு
இந்திய மக்களின் அடிப்படை வாழ்வா தாரம் முடங்கிக் கிடக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பசியும் பட்டினியுடன் இன்று மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் நெருக்கடியில் நொறுங்கிக் கிடக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலையை நிறுத்தி விடுவோம் என் றீர்கள். ஆனால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து இருக்கிறது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி ஆகிறதா? தேசியமய வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளு படி இருக்கிறதா? ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளான அதானிக்கும் அம்பானிக்கும் எவ்வளவு கடன் தள்ளுபடி கொடுத்திருக்கிறீர்கள்! இந்த 10 வருடங்களில் அதானிக்கும் அம்பானிக்கும் ரூ.18 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறீர்கள். அம்பானிக் கும் அதானிக்கும் தள்ளுபடி செய்கிற கடன்களில் ஒரு மடங்காவது விவசாயி களுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும் தள்ளுபடி செய்திருக்கலாம். இது மக்களுக்கான அரசாக இல்லை; கார்ப்பரேட் முதலாளி களுக்கான அரசாக உள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் வளர்வதால் இந்தியா வளர்ச்சி அடைந்துவிடுமா? இந்தியா எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும், உழைப்பு வளங்கள் நிறைந்து இருக்கிற இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடாகவும் இருக்கிறது. அதிக திறன் வாய்ந்த தொழிலாளர் வர்க்கம் இங்கு நிறைந்திருக்கிறார்கள். ஆகவே சரியான முறையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்கு மாற்றுத் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்.
காஷ்மீரில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக
பாசிசத் தன்மை கொண்ட பாஜகவை வீழ்த்துவதற்காக இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கூட்டணியால்தான் அங்கு பாஜக விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி 5ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பின ராக மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். மதவெறி இல்லாத இந்தியாவை உரு வாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படு கிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக த்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் இருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்கிற அடிப்படையிலே பணி யாற்றுகிறோம். மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை பாது காக்க வேண்டும். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும். இந்த இலக்குடன் கரம் கோர்த்து நிற்கிறோம்.
பாஜகவிடம் இருந்து காப்போம்!
இரண்டு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு மாநில வரி பங்கீடுகளை அறிவித்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.28 ஆயிரம் கோடி வரை பங்கீடாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.7000 கோடி தான். பாஜக ஆட்சியில் இல்லாத மாநி லங்களான கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு குறைவான நிதிகளை ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது. இத்த கைய பாரம்பட்சம் காட்டக் கூடிய ஒன்றிய அரசாங்கம் இருந்தால் மாநில அரசுகளின் நிலைமை என்னவாகும்? தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை, மும்மொழி கொள்கையாக மாற்ற முயற்சித்துக் கொண்டி ருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பவர்கள், பாலியல் தொல்லை போன்ற வழக்குகளில் இருக்கக் கூடிய ரவுடிகளும் குண்டர்களும், பாஜக வில் முக்கிய அரசியல் பிரமுகர்களாக இருக் கிறார்கள். இப்படி இருப்பவர்கள் எப்படி தமி ழகத்தையும் இந்தியாவையும் காப்பாற்ற முடியும். இவர்களிடமிருந்துதான் இந்தியா வையும் தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நகரக் குழு மாநாட்டையொட்டி நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து...