tamilnadu

img

“வந்தே பாரத்” விரைவு ரயில் உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

சென்னை, செப். 23- “டி 18 வந்தே பாரத் விரைவு ரயில்” உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே உற்பத்தி பிரிவுகளில் வெள்ளி யன்று (செப். 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஐசிஎப் பொது மேலாளர் அலுவலகம் அருகே அனைத்து தொழிற் சங்க போராட்டக்குழு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப் உள்ளிட்ட 7 ரயில்வே  உற்பத்தி பிரிவுகளை கார்ப் பரேஷனாக மாற்றி கார்ப்பரேட் கையில் தாரை வார்க்காதே, வந்தே “டி 18 பாரத் விரைவு ரயில்” உற்பத்தி செய்ய பன் னாட்டு நிறுவனங்களுக்கு அனு  மதி வழங்காதே, ஐசிஎப் உட்பட  ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வேயை கூறுபோடும் பிபேக் தேப்ராய் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும், சிஎல்டபிள்யு (மேற்கு வங்கம்)  உற்பத்தியாகும் 9000 எச்பி,  12000 எச்பி ஹை ஸ்பீடு எலக்ட்ரிக் இன்ஜின் உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்காதே, போனஸ் சீலிங்கை ரத்து செய்ய வேண்டும், புதிய  ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் பி.மோகன்தாஸ்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.மனோ கரன் (ஏஐஆர்எப்), டி.எம்.செந் தில்குமார் (என்எப்ஐஆர்), வ.முரளிதரன் (தொமுச), எஸ். ராமலிங்கம், பா.ராஜாராமன் (சிஐடியு), கே.சுந்தர் (பிஎம்எஸ்), ஏ.கே.தனேஷ் குமார் (அண்ணா ஒர்க்கர்ஸ் யூனியன்), எச்.கார்த்திக் (ஐஎஸ்எல், ஏஐஆர்எப்), டி.ராஜேந்திரன் (ஏஐடியுசி), எஸ்.மங்காராமன் (ஏ 1 எஸ்சி, எஸ்டி அசோசியேஷன்), கே.வி. ரமேஷ் (ஐஆர்டிஎஸ்ஏ), சுரேந்தர் (ஏஐஆர்எம்எஸ்ஏ), கே.ராமமூர்த்தி (ஏஐஒபிசி) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;