சென்னை,டிச.18- தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். விருதுநகரில் நடைபெறும்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.