நிகரகுவாவில் அமைக்கப்பட்டிருந்த தைவான் தூத ரகக் கட்டிடத்தை எடுத்து சீனாவிடம் தந்து டேனியல் ஓர்டேகாவின் அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தி ருக்கிறது. நிகரகுவாவில் இடதுசாரி ஜனாதிபதியான டேனியல் ஓர்டேகா மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள் ளார். தைவானின் தூதரக உறவுகள் 15 நாடுகளு டன்தான் இருந்து வந்தன. இதில் நிகரகுவாவும் ஒன்றா கும். நிகரகுவாவில் மனாகுவாவில் தூதரகம் அமைக்கப் பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களி லேயே, சீனாவை மட்டுமே தாங்கள் அங்கீகரிப்பதாக டேனியல் ஓர்டேகா குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, மனா குவாவில் உள்ள கட்டிடம். பொருட்கள் ஆகியவற்றை விற்பதிலும், நன்கொடையாக அளிப்பதிலும் தைவான் தூதரக அதிகாரிகள் முனைப்பு காட்டினர். இத்தகைய விற்பனை அல்லது நன்கொடை எதுவுமே சட்டப்படி செல்லாது என்றும், இவையனைத்துமே சீனாவுக்குச் சொந்தமானவை என்றும் நிகரகுவா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதோடு, கட்டிடத்தைக் கையகப்படுத்தி சீனாவிடம் ஒப்படைத்து விட்டார்கள். இதுவரையில் எட்டு நாடுகள் தைவானுடனான தங்கள் தூதரக உறவைத் துண்டித்துவிட்டு ஒரே சீனா தான் என்று அங்கீகரித்துள்ளன. தற்போது நிகரகுவா வும் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால், இன்னும் 14 நாடுகளுடன் மட்டுமே தூதரக உறவை தைவான் வைத்துள்ளது. நிகரகுவாவுக்கு எதிராக சட்டரீதியான நட வடிக்கை எடுக்கப்போவதாக தைவான் அறிவித்திருக்கிறது.