திருநெல்வேலி, ஜூன் 21- செவிலியர் போட்டித் தேர்வு 16 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் செவிலியர் பதவிக்கான போட்டித் தேர்வு திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்க ளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறு கிறது. அதன்படி, பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி, பழையபேட்டை ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, மேலத் திடீயூர் பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக், அரியகுளம் ஸ்ரீ சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சாராதா கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி, கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி, மேலத்திடி யூர் பி.எஸ்.என். பாலிடெக்னிக், மேலத்திடியூர் பி.எஸ்.என். அறிவி யல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 9,494 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வினை கண்கா ணிக்க வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 9 சுற்றுக் குழு அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இதுதவிர 3 துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் தேர்வை விடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் கண்காணித்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு சீராக இயக்கக் கேட்டும் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலை யத்துக்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும். தேர்வர்க ளுக்கு பேனா முதலிய எழுது பொருள் கள் தேர்வு அறையினுள் வழங்கப்படும். தேர்வர்கள் அனுமதிச் சீட்டுடன் ஆளறிச் சான்றினை கட்டாயம் கொண்டு வர வேண்டும். தவறும்பட்சத்தில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். தேர்வர்கள் ஓஎம்ஆர் சீட்டில் நீல நிற பந்துமுனை பேனாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும். www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அதில் தேர்வுக் கூடத்தில் முதன்மை கண்காணிப்பாளர் முன்பாக மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.