“வாய்ப்புகளும் வருமானமும் அதிகரிக்கும் தருணம் இது! வறுமையும் குறைந்து கொண்டிருக்கிறது”
இது 2024ல் பிரதமர் மோடி பேசிய உரை! ஆனால் உண்மை என்ன?
குறைந்தபட்ச தேசிய வார ஊதியம் ரூ.3035 ஆக இருக்க வேண்டும் என்பது அரசு அமைத்த அனூப் சத்பதி கமிட்டியின் பரிந்துரை. ஆனால் உண்மை நிலவரம் என்ன?
ஊதியம் பெறுவோரின் சுய வேலைவாய்ப்பு
வார வருமானம் /ரூ வார வருமானம் /ரூ
நகர்ப்புற ஆண்கள் 2791 2971
நகர்ப்புற பெண்கள் 2135 1776
கிராமப்புற ஆண்கள் 1216 1061
கிராமப்புற பெண்கள் 704 632
இந்த உண்மை ஊதியம் என்பது கடந்த 10 ஆண்டுகளாக தேங்கிய நிலையில் உள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் ஊதியம் உயரவில்லை; ஆனால் விலைவாசி உயர்ந்து கொண்டே உள்ளது. மறுபுறம் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சி அடைகின்றன. இந்த சூழல் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளது என்பதை கூறத்தேவையில்லை.
உழைப்பாளிகளுக்கு நியாயமான ஊதியம் கிடைக்க பா.ஜ.க. அரசை அகற்றுவது அவசியம்!