tamilnadu

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் : 2 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

சென்னை, பிப்.16- 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுகான வினாத்தாள்கள் கசிந்த விவ காரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 தனியார் மெட்ரிகு லேஷன் பள்ளிகளுக்கு தமிழக பள்ளி  கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. பெரும்பாலான வினாத்தாள்கள் முன் கூட்டியே சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையின் அடிப்படையில், போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.