tamilnadu

கச்சா எண்ணெய் ஒரே வாரத்தில் 30 டாலர்கள் விலை குறைந்தது!

புதுதில்லி, ஏப். 8 - உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 134 டாலர் வரை உயர்ந்தது. இதையே காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 16  நாட்களில் 14 முறை உயர்த்தப் பட்டது.  அதாவது இரண்டே வாரத்தில் பெட்ரோல் - டீசல் விலை லிட்ட ருக்கு தலா 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதன்காரணமாக, அதிகபட்ச மாக பெட்ரோல் விலை மும்பை யில் லிட்டருக்கு 120 ரூபாய் 51 காசுகளாகவும், கொல்கத்தாவில் 115 ரூபாய் 12 காசுகளாகவும், சென் னையில் 110 ரூபாய் 85 காசுகளாக வும், குறைந்தபட்சமாக தில்லியில் 105 ரூபாய் 41 காசுகளாகவும் உள்ளது. இதேபோல டீசல் விலை அதிகபட்சமாக மும்பையில் 104 ரூபாய் 77 காசுகளுக்கும், சென்னை யில் 100 ரூபாய் 94 காசுகளுக்கும், கொல்கத்தாவில் 99 ரூபாய் 83 காசு களுக்கும், தில்லியில் 96 ரூபாய் 67 காசுகளுக்கும் விற்கப்பட்டு வரு கிறது. சர்வதேச சந்தையைக் கார ணம் காட்டித்தான் இந்தளவிற்கு பெட்ரோல் - டீசல் விலையை மோடி அரசு உயர்த்தியது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படி ாக குறைந்து, தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 100 ரூபாய் 58 டாலராக குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலையும் ஒரே வாரத்தில் 13 சதவிகிதம் குறைந்துள் ளது. ஒரே வாரத்தில் இவ்வளவு விலை குறைவது கடந்த 2 ஆண்டு களில் இதுவே முதல்முறை. ரஷ்யா வில் இருந்து எரிவாயு இறக்குமதி க்கு தடை விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைத்ததால் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக கூறப்படு கிறது.  எனினும்கூட, மோடி அரசு இதுவரை உயர்த்திய விலையைக் குறைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் விலை உயராமல் பார்த்துக் கொள்ளும் மோடி அரசு, மற்ற நேரங்களில் எண்ணெய் நிறுவ னங்கள் மீது பழியைப் போட்டு, தங்களுக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று தொடர்ந்து தப்பித்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.