tamilnadu

தமிழ்நாட்டின் மீது யாரும் எதையும் திணிக்க முடியாது: ராகுல் காந்தி

சென்னை, பிப். 28- தமிழ்நாட்டின் மீதுயாரும் எதையும் திணிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார். சென்னையில் மு.க.ஸ்டாலின் சுயசரிதை  நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதா வது: தமிழ்நாட்டிற்கு வருவது  எப்போதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கும். சில நாட்களுக்கு முன்னாள் நான் நாடாளுமன்றத்தில் ஆற்றியை உரை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டதை நான் அறிவேன். நான் அடிக்கடி தமிழ் என்று உச்சரிப்பதற்கு காரணம் என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளது. ஒரு தந்தையை இழந்த அனுபவமும், வேதனையும், சோகமும் நான்  நன்கு அறிவேன்.

நான் மக்களவையில் பேசும் போது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்  என்று குறிப்பிட்டேன். ஒரு மாநிலம் என்றால் என்ன? மண்ணில் இருந்து, மக்களிடமிருந்து வெளிவரும் குரலில் இருந்து மொழி வருகிறது. மொழியிலிருந்து கலாச்சாரம் வருகிறது. கலாச்சாரத்தில் இருந்து வரலாறு வருகிறது. வரலாற்றில் இருந்து மாநிலம் உருவாகிறது. மாநிலங்களில் இருந்துதான் இந்தியா வருகிறது. எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாக மாறுகிறது. வார்த்தைகள் ஒன்று  சேர்ந்து வாக்கியமாக மாறுகிறது. வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதையாக மாறுகிறது. எழுத்துக்களை, சொற்களை, வாக்கியங்களை மதிக்கவில்லை என்றால் வேறு எதை மதிப்பது, பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல் லாம், தமிழ்நாட்டை குறித்து பேசுகிறார். 3000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டது தமிழ் என்று கூறும்  பிரதமர் மோடி சொற்களை, வாக்கியங்களை, மொழியை புரிந்து கொள்ளவில்லை. பின்னர் எந்த அடிப்படையில் அவர் தமிழ்நாடு குறித்து பேசுகிறார். தமிழர்களின் குரலை புரிந்து கொள்ளாதவர் எப்படி தமிழ்நாட்டை குறித்து பேச முடியும். எதையும் புரிந்து பேசாத நீங்கள் தமிழர்கள் மீது என்ன மரியாதை வைத்திருக்க முடியும். தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலான நீட் வேண்டாம் என்பதற்கு பிரதமர் மதிப்பளிக்கவில்லை.

ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு சாதகமானது இல்லை, பாதகமானது என்று சொல்வதை கூட புரிந்து கொள்ளாமல், மாநிலங்க ளின் உணர்வுகளை பிரதமர் அவமதிக்கி றார். பிரதமர் தமிழகத்தின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதில்லை, இந்த நாட்டினுடைய வரலாற்றையும் தெரிந்து கொள்ளவில்லை. கடந்த 3 ஆயிரம் ஆண்டு களில் ஏன் தற்போது வரை தமிழ்நாட்டின் மீது யாரும் எதையும் திணிக்க முடிந்த தில்லை. பிரதமரிடத்தில் இருப்பது எதையும்  சரியாக புரிந்து கொள்ளாத தன்மை. நாட்டில் உள்ள எந்த மாநிலத்தை குறித்தும் பிரதமருக்கு புரிதல் இல்லை. சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு  மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசங்க ளாக மாற்றியதில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேச மாக மாற்றப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே ஆள  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத்,  உத்தரபிரதேச அதிகாரிகள் இப்போது ஜம்மு காஷ்மீரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இது ஜம்மு காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

நாம் வேற்றுமையில் ஒற்றுமை குறித்து பேசுகிறோம். இந்தியா பல்வேறு மொழிகளை யும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. வரலாற்று ரீதியாக இந்த வேற்றுமையில் ஒற்றுமையின் காரணமாக நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்தது. இதுதான் இந்தியாவின் பலம். முழுமையான ஒற்றுமை யின் மூலம்தான் இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று  தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது.நாடு  எப்படி இருக்க வேண்டும் என்று ஏன்  நாட்டு மக்கள் தீர்மானிக்கக் கூடாது. இதுதான்  இன்று நாட்டின் முக்கிய மைய பிரச்சனை யாக உள்ளது.  நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக திட்டமிட்டு மக்களுடைய உரிமைகளும், உணர்வுகளும் நசுப்பட்டு வரு கின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகைத்துறை எல்லாம் தொடர்ச்சியாக திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. பாஜக எந்த கற்பனை உலகத்திலும் வாழ வேண்டாம். உங்களை எப்படி எதிர்கொள்வது என்பது  எங்களுக்குத் தெரியும். அவர்கள் பாரம் பரியத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அவர்களால் அதில் வெல்ல முடியாது.  நிச்சயம் மக்கள் ஒற்றுமை அவர் களை வீழ்த்தும். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.