tamilnadu

img

காளான் உருவாக்கத்தில் புதிய தொழில்நுட்பம் த.பே.மா.லு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

காளான் உருவாக்கத்தில் புதிய தொழில்நுட்பம்
த.பே.மா.லு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் கல்லூரியில் காளான் உருவாக்கத்தில் புது மையான தொழில்நுட்பம் குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் டி.ஸ்டீபன்  தினகர் தலைமை வகித்து காளான் வளர்ப்பை, புதுமை யான தொழில்நுட்பத்தை கொண்டு பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்த விலங்கியல் துறை, தலைவர் மற்றும்  பேராசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். விலங்கியல் துறை தலை வர் முனைவர் ஜி.தாமஸ் நித்தியானந்தம்  வரவேற்று பேசினார்.  கருத்தரங்கில் மேற்குவங்க மாநிலத் தின், வடக்கு வங்காள வேளாண் பல்கலைக் கழக ஆய்வு இணையர் முனைவர் எல்.ஞான சிங் ஜேசு மகாராஜா புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு காளான் வளர்ப்பது, அதன்மூலம் நாம் எவ்வாறு சுயதொழில் செய்வது, அதனை எவ்வாறு சந்தைகளில் விற்பது என்பது குறித்தும், காளான் வளர்ப்பதால் சுற்றுச்சூழலின் பயன் பாடு, நம்முடைய ஊர்களில் என்ன வகை யான காளான்கள் வளரும் என்பதையும் செய்முறை மூலம் மிகவும் எளிய முறையில்  விளக்கி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர் களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். துணை முதல்வரும், ஐக்யூஏசி ஒருங்கி ணைப்பாளருமான எம்.ஹேனா கிளாடிஸ், பேராசிரியர் முனைவர் டி.ஜான்சி, கல்லூரி வளாக ஆயர்.வினிதா ஆகியோர் உரை யாற்றினர். பேராசிரியர் முனைவர் ஏ. செல்வம் ஒருங்கிணைப்பு செய்த இந்த  தேசிய கருத்தரங்கில் 105 பேராசிரியர்களும், 145 மாணவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த தேசிய கருத்தரங்கில், அனைத் துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்ன தாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய கருத்த ரங்கு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.செல்வம் நன்றி கூறினார்.

அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.