tamilnadu

img

பெருநாவலூர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

பெருநாவலூர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும், ஏழு நாள் சிறப்பு முகாமின் ஒருபகுதியாக, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி உள் வளாகத்தில் மண்டிக்கிடந்த புல் பூண்டுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நிர்வாகவியல் துறைத்தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனைவர் இரா. சத்துருசங்கார வேல்சாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர், நாட்டு நலப்பணித்திட்டத்தின் நோக்கமும் ஆக்கமும் குறித்து மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். மை பாரத் பதிவு மற்றும் சான்றிதழ்கள் பதிவிறக்கம், போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மொபைல் செயலி பதிவிறக்கப் பணிகளில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.  கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முன்னாள் மாணவர்கள், முந்தைய ஆண்டுகளின் சிறப்பு முகாம் அனுப வங்களை, இந்நாள் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.