tamilnadu

img

சீமான் அண்ணனா? ஸ்லீப்பர் செல்யா? அண்ணாமலை தம்பியா?

 மதுரை தொகுதியில் போட்டி யிடும் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் சத்தியாதேவியை ஆதரித்து  மதுரை, கோ.புதூரில் கடந்த 31 அன்று  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்  பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டத் தில் பேசினார். அப்போது அவர், “தம்பி  அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான் தான் அவரை பாஜகவுக்கு அனுப்பியுள்ளேன். ‘என் மண், என் மக்  கள்’ , ‘வேல் யாத்திரை’ எல்லாம் என்னு டைய முன்னெடுப்புகள். எனவே பிரதமர்  மோடி, தம்பி அண்ணாமலை எல்லாம் எனக்கு வேலை செய்கிறார்கள்” என் றார். தமிழக பாஜக தலைவர் அண்ணா மலையை, சீமான் தன்னுடைய ஸ்லீப்பர்  செல் என கூறியது அரசியல் அரங்கில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கோவை மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் அண்  ணாமலை,  பிரச்சாரத்தின் போது  செய்தியாளர்களை சந்தித்தார்.  “சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை. ஓட்டும் இல்லை. அண்ணா மலை சீமான் அண்ணனின் ஸ்லீப்பர்  செல்லா... இல்ல சீமான் அண்ணன் அண்ணாமலையின் ஸ்லீப்பர் செல்லா... இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள்  எந்தப் பக்கம் வருகிறார்கள் என்று அவ ருக்குத் தெரியும். இன்று தேசிய ஜன நாயகக் கூட்டணிக்கு ஆதரவு சிறப்பாக  உள்ளது. எனவே சீமான் அண்ணன் பேசி யதை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.” என்றார். இதையடுத்து கச்சத்தீவு விவகா ரத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில்  உள்ளது. அதன் ஆவணங்களை பெற  ஆர்டிஐ மூலம் தகவல் பெற வேண்டிய தன் அவசியம் என்ன என செய்தியாளர்கள்  கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த  அண்ணாமலை, “இதை நாங்கள் (பாஜக) இப்போதுதான் தீவிரப்படுத்தியுள்ளோம். கச்சத்தீவு நமக்கு வேண்டும் என்பது  பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. கச்சத்தீவை பெற்றால் தான் தமிழக மீன வர் பிரச்சனையை தீர்க்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு கடந்த 3 ஆண்டுகளாக நேரில் சென்று  அங்குள்ள உயர் அதிகாரிகள், ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி நண்பர்களை சந்தித் துப் பேசியிருக்கிறேன்” என்றார்.