tamilnadu

img

மறைமலை அடிகளார் சிலைக்கு நாகைமாலி எம்எல்ஏ மரியாதை

நாகப்பட்டினம், ஜூலை 15 - தனித்தமிழ் இயக்கத்தின்  தந்தை என போற்றப்படும் மறைமலை அடிகளார் 148  ஆவது பிறந்தநாள் விழா வில், அவருடைய உருவச் சிலைக்கு கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  நாகப்பட்டினம் மாவட் டம் காடம்பாடி அருகில்  வேதாச்சலம் என்ற மறைமலை அடிகள்  பிறந்தார். தமிழுக்காக அரும்பாடுபட்ட இவர்,  தமிழில் பிறமொழி சொற்கள் கலவாமை இருத்தல் என்ற கோட்பாட்டோடு இயங்கியவர். அதனால் தனித்தமிழ் இயக்கம் கண்டவர். உரை நடை, நாடகம் உள்ளிட்டவற்றில் பல நூல்கள் எழுதியுள்ளார்.  இவருடைய உருவச்சிலை நாகப்பட்டினம் ரயில் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்தது. ரயில் நிலையம் எதிரில் இருக்கிற சாலை தற்போது விரிவாக்கம் நடைபெறுகிறது. எனவே அங்கிருந்து சிலை எடுக்கப்பட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அரு கிலுள்ள தம்பிதுரை பூங்காவில் நிறுவப்பட்டு உள்ளது.  மறைமலை அடிகள் பிறந்த தினமான ஜூலை 15 அன்று, புதிய இடத்தில் நிறுவப் பட்டுள்ள அச்சிலைக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்  மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சை யப்பன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.  தமுஎகச மாவட்டத் தலைவர் ஆவராணி  ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆதி.உதய குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்க மணி, சிபிஎம் நகரச் செயலாளர் க.வெங்கடே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.