tamilnadu

img

வெண்மணி தியாகிகள் நினைவு சுடர் பயணம் நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம், செப்.10- நாகப்பட்டினம் மாவட் டம் கீழவெண்மணி தியாகி கள் நினைவிடத்தில் வாலி பர் சங்க மாநில மாநாட்டிற் கான சுடர் பயணத்தை கீழ்  வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகை மாலி தொடங்கி வைத்தார்.  கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் நடைபெறவுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாட்டையொட்டி, நாகப் பட்டினம் மாவட்டம் கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் 44 வீரத் தியா கிகளின் நினைவாக சுடர் பயண தொடக்க விழா நடை பெற்றது.  நிகழ்விற்கு வாலிபர் சங்க நாகை மாவட்டத் தலை வர் என்.நன்மாறன் தலைமை  வகித்தார். தியாகிகள் நினைவு சுடரை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி எடுத்து கொடுக்க, வாலிபர் சங்க  மாநிலக்குழு உறுப்பினர் ஏ. சிவக்குமார் பெற்றுக்கொண் டார்.  நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ், மாவட்டப் பொருளாளர் என்.எம்.பாலு  ஆகியோர் கலந்து கொண்ட னர்.

;