tamilnadu

img

“மாணவர்கள்-இளைஞர்களுடன் எனது பயணம்”

சென்னை,ஜூன் 30- தமிழ்நாட்டின் தலை மைச் செயலாளராக செயல்பட்டு வந்த வெ. இறையன்பு வெள்ளியன்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், வெ. இறையன்பு பத்திரிகையா ளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பணி  ஓய்வுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்ற  எதிர்காலம் பற்றி நான்  இதுவரையிலும் திட்டமிட வில்லை. முதலில் ஒரு மாத  காலம் முழுவதும் ஓய்வில் இருப்பேன். அதன் பின்னர், சமுதாயம் என்னை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறதோ, அதற் கேற்றபடி செயல்படுவேன். சமுதாயம் எதை நோக்கி என்னைக் கொண்டு செல்கிறதோ அதை நோக்கி எனது பயணம் இருக்கும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் எனது பயணம் இருக்கும்” என்றார். வாழ்த்து முன்னதாக, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வெ.இறையன்புவை சந்தித்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாழ்த்து  கூறினார். ‘இளைஞர்க ளுக்கு உந்து சக்தியாக நீங்கள் உள்ளீர்கள்’ என்று கூறினர். தொடர்ந்து சமூக பணியில் ஈடுபட்டு புத்தகங்களை எழுத வேண்டும் என இறை யன்புவுக்கு நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.