சென்னை பிராட்வேயில் பன்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம்
ரூ.566.59 கோடியில் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கத்திட்டம்
சென்னை, ஜூன் 5- பிராட்வேயில் உள்ள குறளகம் கட்ட டத்தை புதுப்பிப்பதற்கும், பன்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளா கம் அமைப்பதற்குமான முக்கிய ஒப்பந் தம் சென்னை மெட்ரோ சொத்து மேலா ண்மை நிறுவனத்திற்கும் (சிஎம்ஏ எம்எல்) , பிரிட்ஜ் அன்ட் ரூப் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு இடையே கையெ ழுத்தாகியுள்ளது. கட்டுமானப்பணிகள் ரூ.566.59 கோடி மதிப்பில் (ஜிஎஸ்டி தவிர்த்து) வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத் தின் மூலம், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வர்த்தக வளாகங் களுடன் இணைந்து அமையவுள்ளது. இந்த பேருந்து முனையம் (அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளம்) 24 மாதங்களுக்குள் கட்டிமுடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதற்கு மேலே உள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளா கம் மற்றும் குறளகம் கட்டிடம் 30 மாதங் களுக்குள் நிறைவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மொத்த பரப்ப ளவு 6.484 ஏக்கர். பன்நோக்கு ஒருங்கி ணைந்த போக்குவரத்து பேருந்து வளாக கட்டிடம் மொத்தம் 1,08,290 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டி ருக்கும். இதில் இரண்டு அடித்தள நிலை கள், ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் அடங்கும். புதுப்பிக்கப்படும் குறளகம் கட்டடம் மொத்தமாக 22,794 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்கள் அமையும்.