மதுரை, பிப்.4- மதுரை மாவட்டம் மேலூர் அருகே வுள்ள கொட்டாம்பட்டியில் ரூ.4.90 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியினை தமிழக வணிகவரி மற்றும் பதி வுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகை யில், ‘‘இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறை வேற்றி உள்ளார். அவருக்கு மக்களின் சார்பாக நன்றி. வரும், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே தற்போது ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல தமிழகத்திற் கான எந்த அறிவிப்பும் இல்லை. இரண்டு பெரும் வெள்ள அபா யத்தை சந்தித்துள்ள போதும் தமிழ கத்திற்கு எந்த நிதியும் அறிவிக்கப்பட வில்லை. பணம் படைத்தவர்கள் வெறும் 30 சதவீதம் வரியாக கொடுத்துள்ள நிலையில், அடித்தட்டு மக்கள் 60 சதவீதம் வரியாக செலுத்தி யுள்ளனர். இதன் மூலம் மக்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கும் வேலை யைத் தான் ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகின்றது. இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத்துவ மனைகள் கட்டி இருப்பதாக ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். அதோடு ஓர் ஒற்றைச் செங்கலையும் கட்டி இருப்ப தாக நாங்கள் கூறி இருக்கின்றோம். இந்திய நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டி ருக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தை தகர்க்கின்ற வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்துக் கொண்டிருக்கின்றது. இதனை இந்திய மக்கள் விட மாட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தி யா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’’ என்று கூறினார்.