tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

பேராவூரணி தொகுதிக்கு சுமார் ரூ.26 கோடியில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வர், துணை முதல்வர், துறை அமைச்சர்களுக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர்  நா. அசோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.  மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு முதல்வர், துணை முதல்வர், துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீதமுள்ள அனைத்தையும், முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, பெற்றுத்தந்து, பேராவூரணி தொகுதியை குறை இல்லாத தொகுதியாக மாற்றப் பாடுபடுவேன்” என எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகளின் சார்பில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் முனைவர் காப்பியன் தலைமையில், பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் நடைபெற்றது. நிகழ்வில் மருத்துவர் கோசிபா, மூத்த வழக்கறிஞர் ப. காமராசு, கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் துணைச் செயலாளர் எம். நெடுஞ்செழியன், ஜீவா அறக்கட்டளை இயக்குநர் எஸ்.ஆர். மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் தமிழோவியன் பாடல் பாடினார். கவிஞர் எட்வின், பேராசிரியர் ரம்யா ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் சு.க. பழனியின் மகிழ் உயரங்கள் கவிதை நூலை, மாவட்டத் தலைவர் கவிஞர் பாளை செல்வம் அறிமுகம் செய்தார். நூலாசிரியர் கவிஞர் சு.க. பழனி ஏற்புரை வழங்கினார். நதிகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் க. கார்த்திகா நன்றி தெரிவித்தார்.

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா 

கரூர், மார்ச் 31-  கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைக்காரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் மகேந்திரன், முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நீலா வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடாசலம், உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இளநிலை ஆசிரியர் ஆனந்த் நன்றி கூறினார்.

நூல்கள் வெளியீட்டு விழா

அதிசயப் பிறவி மாபெரும் தலைவர் காமராஜர், தமிழக நூலக அருள்பணி இயக்க ஆலோசனைக் கூட்டம் மற்றும்  குமரி  மு ராஜேந்திரன் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா கருங்கல் அருகே உள்ள கல்நாட்டி விளையில்  நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ரூபி ஆர்தர் தலைமை தாங்கினார்.  இயக்கத்தின் முதல் தலைவர் போதகர் தேவதாஸ்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  துணைத் தலைவர் அஜித் சிங் ஜான் அனைவரையும் வரவேற்று பேசினார்.