இ.கே.நாயனார் நகர் (கண்ணூர்), ஏப். 7- கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23 ஆவது மாநாட்டையொட்டி சனிக் கிழமைன்று நடைபெற உள்ள மத்திய - மாநில உறவு கள் குறித்த தேசிய கருத்த ரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.வி. தாமஸ் பங்கேற்று உரை யாற்ற உள்ளனர். ஏ.கே.ஜி.நகரில் (கண் ணூர் ஜவஹர் ஸ்டேடியம்) சனியன்று (ஏப்.9) மாலை 5 மணிக்கு ‘மத்திய மாநில உற வுகள்’ குறித்த கருத்தரங்கை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
தடையை மீறி கே.வி.தாமஸ் பங்கேற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், கே.வி.தாமஸ் ஆகி யோர் பங்கேற்பதாக அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கருத்தரங்கில் பங்கேற்றால் காங்கிரஸ் கட்சியில் இவர்கள் நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் கேரள கமிட்டி (கே.பி.சி.சி) தலைவர் கே.சுதாகரன் அறிவித்தார். அதன்படி சசிதரூர் பின்வாங்கினார். ஆனால் கே.வி.தாமஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருந் தது கடந்த சில நாட்களாக கேரளத்தில் பெரும் விவா தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வியாழ னன்று (ஏப்.7) செய்தி யாளர்களை சந்தித்த கே. வி.தாமஸ். தனது நிலைப் பாட்டை தெரிவித்தார். அப்போது அவர், “நான் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க செல்ல வில்லை. பாஜகவின் வகுப்பு வாத அபாயத்தை எதிர் கொள்ள தேசிய அள வில் அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் நிலைப்பாடு. தேசிய அளவில் ஒரு நிலைப்பாட்டையும் கேரளத்தில் மற்றொரு நிலைப்பாட்டையும் மேற் கொள்ள முடியாது. கே. சுதாகரின் பிடிவாதம் காங்கிரஸ் கட்சியின் நிலைப் பாட்டுக்கே எதிரானது. நான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டின்படிதான், சிபிஎம் நடத்தும் மத்திய மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்க உள்ளேன். சிபிஎம் நிலைப்பாடுகளுடன் மாறுபட்ட கருத்துகள் காங் கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதனை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்பாகவே நான் இந்த கருத்தரங்கில் பங்கேற்கிறேன். அதற்கான குறிப்புகளை தயார் செய்து வைத்துள்ளேன்” என்று கூறிய அவர், அந்த குறிப்பை செய்தியாளர்களிடம் காட்டி னார். மேலும், பாஜக நிறு வன தின வாழ்த்துகளை ட்வீட் செய்த காங்கிரஸ் தலை வர்களை வெளியேற்று வோம் என்று காங்கிரஸ் ஏன் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.வி.ஜெயராஜன் வரவேற்பு
கே.வி.தாமஸின் அறி விப்பை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்ட செயலாளர் எம். வி.ஜெயராஜன் வரவேற் றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், யாருடைய அர சியல் எதிர்காலத்தையும் ஒழித்துக்கட்ட கே.சுதாக ரனால் முடியாது என்றார். ஏற்கனவே கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.பி.அனில் குமார் கூறுகையில், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவை அகற்ற மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்று பட வேண்டியது கட்டாயம். சிபிஎம் நடத்தும் கருத்தரங் கில் பங்கேற்றால் நடவடிக் கை எடுப்பதாக சுதாகரன் அறிவித்திருப்பது மாற்றுக் கருத்தை அனுமதிக்க மறுப்பதாகும் என்றார். ‘இந்தியாவில் பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ ராஜ்ஜியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வரும் பாஜகவை அரசியல் அரங்கிலிருந்து தனிமைப் படுத்தி வீழ்த்துவோம்; அதற்காக நாட்டின் அனை த்து இடதுசாரிகள், மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம்’, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டை புத னன்று (ஏப்.6) துவக்கி வைத்த கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்திருந்தார். தேசிய அளவில் மக்க ளுக்கு நம்பிக்கையளிக்கும் மாற்றை முன்னிறுத்த முய லும் சிபிஎம் நிலைப்பாட்டு க்கு மாறாக பாஜகவுக்கு உதவும் காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத்தலைவரின் செயல்பாடு கேரள மக்கள் மத்தியில் பெரும் விவாதத் துக்கு வழிவகுத்துள்ளது.
மாற்றுக்கருத்துகளை விவாதிப்பதே நோக்கம்
கருத்தரங்கம் குறித்து கோடியேறி பேட்டி
மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் மாற்றுக்கருத்துகளை விவாதிப்பதற்கான ஏற்பாடு என்று கோடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் கேரள மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், “பாஜக ஆட்சியை மத்தியி லிருந்து அகற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவும், அதில் மாறு பட்ட கருத்துகளை விவாதிக்கவும் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இதுபோன்ற நிலைபாட்டை எடுத்தால் மேலும் பலரை அந்த கட்சி இழக்க வேண்டியது வரும். ஏற்கனவே, கேரளாவில் காங்கிரஸிலிருந்து 3 பொதுச் செயலாளர்கள் ராஜி னாமா செய்து சிபிஎம்முடன் ஒத்துழைத்து வருகிறார்கள். மாற்றுக் கருத்துகளை கண்டறியவும் விவாதிக்கவுமே மற்ற கட்சியினர் அழைக்கப்படுகிறார்கள். சிபிஎம்மின் கருத்தை மட்டுமே விவாதிப்பது என்றால் மற்றவர்களை அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாஜக ஏற்றுக்கொள்ளாத எந்த கருத்தையும் கூற காங்கிரஸ் கட்சி தயார் இல்லை என்பதையே இந்த நிலைப்பாடு காட்டுகிறது” என்றார். கேரளாவின் திருக்காகரை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை நோக்கமாக கொண்டு கே.வி.தாமஸை சிபிஎம் அழைத்துள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோடியேறி, நாங்கள் தேசிய அளவில் பாஜக ஆட்சியை வெளியேற்ற- நாட்டின் எதிர்கால நலன் குறித்து சிந்திக்கிறோம். இதுபோன்ற சிறிய விஷயங்களோடு அதை இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை என்றார்.